சுந்தரவனத்தில் வணிக இறல் மீன் வளர்ப்பு: வறுமையைப் பயன்படுத்தி வளரும் தொழில்
வங்காள விரிகுடாவில் அடிக்கடி ஏற்படும் சூறாவளிகளால் கடல் நீர் பொங்கி அருகிலுள்ள கிராமங்களைச் சின்னாபின்னமாக்குகிறது. இந்தக் கிராமங்கள் வணிக இறால் மீன் வளர்ப்பை விரிவுபடுத்த விரும்பும் தனியார் வணிகர்களை ஈர்க்கும் இடங்களாக மாறிவருகின்றன. சிறிய அளவிலான இறால் வளர்ப்பு பல பதிற்றாண்டுகளாக வங்கத்தின் டெல்டா பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வருமான ஆதாரமாக இருந்துவருகிறது. வணிக ரீதியான மீன்வளர்ப்புக்கான தற்போதைய விரிவாக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தனியார் உரிமையாளர்கள் சமூக அளவில் ஏற்னெனவே பின்தங்கிய குழுக்களைக் குறிவைக்கிறார்கள்.