நகர்ப்புற இந்தியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பாகுபாட்டில் வாக்களிப்பின் பங்கு என்ன?
இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கோவிட்-19 பொது முடக்கத்தின்போது மிகுந்த இன்னல்களை அனுபவித்தார்கள். அவர்களில் பலர் வீடு திரும்பவும் அத்தியாவசியமான சேவைகளைப் பெறவும் மிகவும் போராடினார்கள். இந்தியா விரைவாக நகரமயமாகிவரும் போக்கு, வேலை தேடுபவர்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கிப் பெருமளவில் இடம்பெயர வழிவகுத்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த இடப்பெயர்வுக்கு உள்ள முக்கியத்துவம் ஐயத்திற்கு அப்பாற்பட்டது. இருந்தாலும் பெருந்தொற்றின் தொடக்க நாட்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் காட்டப்படும் அலட்சியத்தின் மீதான கவனத்தைக் குவித்தன.