இந்தியாவில் கூட்டாட்சி, பொருளாதாரம், மக்கள் நலத் திட்டங்கள்: மையப்படுத்தும் அணுகுமுறையின் வரலாற்று முன்னோடிகள்
இந்தியாவின் பின்காலனிய அரசியல் சாசனம் கூட்டாட்சிக்குப் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது. குறைந்த அளவிலான அல்லது “முழுமையற்ற” கூட்டாட்சி என்று அது அப்போது வரையறை செய்யப்பட்டு, இன்றளவிலும் அப்படியே நீடிக்கிறது. மைய அரசும் மாநில அரசுகளும் தம்மளவில் தன்னிச்சையான அதிகாரம் கொண்டவை என்னும் கருத்திலிருந்து விலகி, மாநில அரசு விவகாரங்களில் மைய அரசு தலையிடும் வகையில் இந்தியாவின் கூட்டாட்சி வரையறை செய்யப்பட்டது. 1989-2014 காலகட்டத்தில் மாநிலங்களுக்கான அரசியல் ரீதியான உரிமைகள் வலுப்பெற்றுவந்தன.