1940கள் முதல் 1970கள் வரை இந்திப் படங்களில் சமூகநீதி
உள்ளூர்ப் பொழுதுபோக்கு வடிவங்களான யாத்திரை, நடனம், கேளிக்கை ஆகியவையே இந்தித் திரைப்படங்களின் தொடக்கமாக இருந்தன. இதன் விளைவாக உருவான திரைப்படங்களில் பெரும்பாலும் நாடகத்தனமான அம்சங்கள், வழக்கமான பாடல், நடனக் காட்சிகளே இடம் பெற்றிருந்தன. “சமூகப் படங்”களாகக் கருதப்பட்ட பெஹன் (சகோதரி-1941), பரயா தன் (பிறரின் செல்வம்-1943) அல்லது பச்பன் (குழந்தைப்பருவம்-1945) ஆகியவற்றிலும் மிகையுணர்ச்சி தூக்கலாக அமைந்திருந்தன. அக்காலகட்டத்தில் இந்தியா காலனிய அடக்குமுறையாலும் அதன் விளைவான சமூகப் பிளவுகளாலும் பாதிக்கப்பட்டு, அடிமைத் தளையிலிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தது.