இந்தியாவில் எரிபொருள் உற்பத்தி: பேசுவது ஒன்று, செய்வது வேறொன்று
பருவநிலை மாற்றம் நாடுகளையும் பிரதேசங்களையும் சமூகங்களையும் தாறுமாறாகப் பாதிக்கிறது. ஏற்கனவே சமூக-பொருளாதார ரீதியில் பலவீனமாக உள்ள இடங்களும் மக்களும் உலகில் அதிகரித்துவரும் உஷ்ணத்தின் தீய விளைவுகளை அனுபவித்துவருகிறார்கள். இந்தியாவில் 75 சதவீத மாவட்டங்களில் அதீதமான பருவநிலைசார் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று காட்டுகிறது. பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் செயல்பாட்டினைப் பாக்கும்போது பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இந்தியாவுக்கு இருப்பது தெரிகிறது.