கல்வியைப் பெறுவதும் கல்வியில் சமத்துவம் பெறுவதும்
ஒரு ரிக்ஷாக்காரனின் மகன் கடினமான பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி அல்லது அதிகாரவர்க்கத்தின் உயர்நிலையில் பணிபுரிவதற்குத் தகுதி பெற்றது குறித்த செய்தி இந்திய ஊடகங்களில் அடிக்கடி வருகிறது. இத்தகைய செய்திகள் இந்தியாவின் உயிரோட்டமுள்ள கல்வித் துறையில் நிலவும் சமத்துவத்தையும் சமத்துவமின்மையையும் ஒருசேரப் பிரதிபலிக்கின்றன. இத்தகைய மாணவர்களின் கடின உழைப்பு பலனளித்திருப்பதுடன் கல்வி அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளதைப் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் சமத்துவத்தைக் காட்டுகின்றன.