பணியாளர்களை மையமாகக் கொண்ட இணையவழிச் சேவைப் பொருளாதரம் (பகுதி 1)
கோவிட்-19 நெருக்கடி இந்தியாவின் இணைய வழிச் சேவைத் துறையின் பணியாளர்களின் துயரங்கள் மீது கவனத்தைக் குவித்துள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட பணிநேரம், குறைந்தபட்சச் சம்பளம், தகவல் உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகிய பணியாளர் உரிமைகள் இல்லாத நிலை அவர்களுடைய வேலையின் பலவீனமான நிலையையும் பாதுகாப்பின்மையையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. பெரிய நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது பெருகிவந்த தேவைகளுக்கு எதிர்வினையாக அமேசான், ஊபர் போன்ற இணைய வழிச் சேவைகள் நுகர்வோரின் இருப்பிடம் தேடி வரும் எல்லா விதமான சேவைகளையும் உள்ளடக்கியதாக மாறின.