இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை எழுச்சியின் உலகளாவிய தாக்கங்கள்
இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலையின் ஆவேசமான ஆட்டம் 2021 மார்ச் மாதம் தொடங்கியது. 2021 ஜூன் மாதத்திற்குள் 19 மில்லியன் மக்கள் தொற்றுக்கு ஆளானார்கள். 240,000 பேர் மரணமடைந்தார்கள் (அதிகாரபூர்வமான கணக்கின்படி). ஆய்வுக்கூடங்களிலிருந்தும் மருத்துவமனைகளிலிருந்தும் வரும் கோவிட்-19 குறித்த தகவல்களையே பெரிதும் நம்பியிருக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டம் (Integrated Disease Surveillance Program - IDSP) தொற்று பாதிப்பையும் மரணங்களையும் பெருமளவில் குறைத்து மதிப்பிட்டிருப்பதாக வல்லுநர்கள் பலர் கருதுகிறார்கள்.