கோவிட்-19 பெருந்தொற்றில் மனித உரிமைகளும் அரசின் கொள்கையும்
கோவிட்-19இன் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பேரலையாய் வீச, துயரங்களும் வேதனைகளும் பெருகுகின்றன. மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகக் குடும்பங்கள் போராடுகின்றன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு வேகமாகத் தீர்ந்துவருகிறது. அத்தியாவசிய மருத்துவப் பொருள்களுக்கான கள்ளச்சந்தைகள் பெருகிவருகின்றன. பிணங்களை எரிக்கும் இடங்களில் கூட்டம் அதிகரிப்பது குறித்தும் கங்கையில் சடலங்கள் மிதப்பது குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. மரண எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகிறது என்பதும் சேர்ந்து தேசத்தின் பிரக்ஞையை உலுக்குகிறது.