இந்தியாவின் தெளிவற்ற மதச்சார்பின்மை
இந்திய மதச்சார்பின்மை என்பது சர்வ தர்ம சமபாவம் (எல்லா மதங்களையும் சமமாக மதித்தல்) என உயர்வாகக் கூறப்பட்டுவருகிறது. மேற்கத்திய மதச்சார்பின்மையிலிருந்து இது சற்றே மாறுபடுகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் தத்துவவாதியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், "இந்தியச் சிந்தனையில் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே நல்லிணக்கம் காணப்படுகிறது. மேற்குலகம் இருவருக்குமிடையேயான முரணைப் பற்றிப் பேசுகிறது" என இந்திய மதச்சார்பின்மையின் ஆதாரமான கோட்பாட்டைப் பற்றிக் கூறினார்.