இந்தியாவில் பொதுக் கடனைக் குறைப்பது குறித்த அலசல்
இந்தியாவின் இறையாண்மைக் கடன் 2020இல் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியது. கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்கான கொள்கை முடிவுகள் இதற்கு ஓரளவு காரணம் என்றாலும் குறைந்த வளர்ச்சியும் அதிக வட்டி விகிதங்களும் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. வட்டி விகிதம் குறைவாக இருக்கையில் கடன்கள் அதிக அளவில் இருப்பதால் பெரிய பிரச்சினை இருக்காது என்று சிலர் வாதிட்டனர். ஆனால் அதிக அளவிலான இறையாண்மைக் கடன்கள் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டக் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் உள்ளன.