மெட்ரோ ரயில்: திரைக்குப் பின் மறைந்திருக்கும் உண்மைகள்
பெங்களூரு நகரில் 2008இல் தொடங்கிய முதல் மெட்ரோ ரயில் லைன் முடிவே இல்லாததுபோலத் தோன்றிய செயல்முறையின் விளைவாக பெங்களூரு நகரைத் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகியது. மெட்ரோ ரயிலின் ஒவ்வொரு பாதையும் சேர்க்கப்படும்போது, இடங்களும் அடையாளங்களும் மறைந்து இடிபாடுகள், துண்டிக்கப்பட்ட மரங்களின் எச்சங்கள், சிதைந்த வெளிகள் ஆகியவையே எஞ்சுகின்றன. போராட்டங்கள் ஓயவில்லை. மெட்ரோ ரயில் வேலையும் நிற்கவில்லை. நகரத்தின் குறுக்கே செல்லும் மெட்ரோ ரயிலானது நகரத்தின் அமைப்பு, வண்ணங்கள், வாழ்விடங்கள் ஆகியவற்றை மறைத்துவிடுகிறது.