இந்தியாவின் மின்சார வாகனத் தொழில் கொள்கை: சவால்களும் வாய்ப்புகளும்

12/05/2025
IiT English Page

மின்சார வாகனங்கள் (Electric vehicles - EV) இப்போது பரவலான பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 2023ஆம் ஆண்டில் உலக அளவில்விற்கப்பட்ட ஐந்து கார்களில் ஒன்றுமின்சார வாகனம். உலகளாவிய மின்சாரவாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 25 சதவீதம் அதிகரித்து, 2024ஆம் ஆண்டின் முதல்காலாண்டில், 2022ஆம் ஆண்டின் வளர்ச்சிவிகிதத்தை எட்டியது.  2024ஆம் ஆண்டில் புதியகார் விற்பனையில் மின்சாரக் கார்கள் விற்பனைசீனாவில் 45 சதவீதமாகவும், ஐரோப்பாவில் 25 சதவீதமாகவும், அமெரிக்காவில் 11 சதவீதத்திற்கு அதிகமாகவும் இருக்கும் என்று சர்வதேசஎரிசக்தி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2024, ஜனவரி-நவம்பர்முதல் சீனா உலகளாவிய மின்சாரவாகனச் சந்தையில் முன்னணீயில் இருந்தது. 15.2 மில்லியன் மின்சார வாகனங்களில் சீனாவின்வாகனங்கள் 9.7 மில்லியன் விற்பனையாயின. வியட்நாம், தாய்லாந்து ஆகியவையும் கணிசமான அளவில் மின்சாரவாகனத்திற்கு மாறின. 2023ஆம் ஆண்டில் மின்சாரவாகன விற்பனையில் முறையே 15 சதவீதத்தையும் 10 சதவீதத்தையும்அவை எட்டின. வளர்ந்துவரும்சந்தைகளான பிரேசில் (3 சதவீதம்), இந்தோனேசியா (2 சதவீதம்), மலேசியா (2 சதவீதம்) போன்ற நாடுகள்சாதகமான கொள்கைகள் காரணமாக வளர்ச்சிக்கானசாத்தியக்கூறுகளைக் காட்டுகின்றன. இருப்பினும், கொள்முதல் சலுகைகளை நிறுத்துவதுதொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

உலகளாவியமின்சார வாகன விற்பனையில் மிகவும்குறைந்த அளவில் 2 சதவீத சந்தைப்பங்கைக் கொண்ட இந்தியா, உள்நாட்டுமின்சார வாகனம் உற்பத்தியையும் பேட்டரிஉற்பத்தியையும் ஆதரிக்க உற்பத்தியோடு இணைக்கப்பட்டஊக்கத்தொகைத் (PLI) திட்டத்தை நம்பியுள்ளது. பெரும்பாலானநாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவின்மின்சார வாகன மாற்றம் இருசக்கர வாகனங்கள் - மோட்டார் பைக்குகள், ஸ்கூட்டர்கள் - மூலம் நடக்கிறது. சீனா, அமெரிக்கா போன்றநாடுகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வதன் மூலம், இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையைவடிவமைப்பதில் அரசு கொள்கைக்கு இருக்கும்பங்கை இங்கே ஆராய்வோம். குறிப்பிடத்தக்கமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், மின்சார வாகனச் சந்தையின்கட்டமைப்பை முழுமையாக வளர்ப்பதிலும், அதிலுள்ளஇடைவெளிகளை நிரப்புவதிலும் இந்தக் கொள்கைகளின் செயல்திறனைமேலும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்தியாவின்கொள்கைகள்
தேசிய மின் வாகனத் திட்டத்தின் (NMEM) கீழ் இந்தியாவின் தேசிய அளவிலான மின்சாரவாகனக் கட்டமைப்பு, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாகனத் தொழில்நுட்பங்களின்வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் இந்தியாவில் மின்சாரவாகனங்களையும் மின்சாரத்துடன் இதர வழிமுறைகளையும் கொண்டகலப்பு வாகனங்களையும் விரைவாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, உற்பத்தி செய்வது (FAME) ஆகிய திட்டங்கள் அடங்கும். மின்சார இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோரிக்ஷாக்கள் போன்றவை), பேருந்துகள், கலப்பு வகை வாகனங்கள் இவற்றுக்கானமானியங்கள் மூலம் மின்சார வாகனங்களைப்பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே FAME I (2015) திட்டத்தின் நோக்கம். FAME II (2019) திட்டம், மின் வாகனங்களுக்கானமின்னேற்ற நிலையங்கள் நிறுவுவதை ஊக்குவிப்பது, மானியவிலையிலான மின்சார வாகனங்களுக்குத் தேவையானவற்றைப்பெருமளவில் உள்ளூரிலேயே உற்பத்தி செய்வதைக் கட்டாயமாக்குவதுஆகியவற்றின் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில்கவனம் செலுத்தியது. உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (PLI) திட்டம் மின் வாகனப்பயன்பாட்டில் மற்றொரு முக்கிய அம்சமாகும். இது மானியங்கள் மூலம்மேம்பட்ட செல் வேதியியல் (ACC) பேட்டரிகள், மின் வாகனங்களின் பாகங்கள் ஆகியவற்றை உள்நாட்டிலேயேஉற்பத்திசெய்வதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இறக்குமதியைச்சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும். FAME I, FAME II ஆகிய திட்டங்களைஅரசாங்கமும் இந்தத் துறையைக் கவனித்துவருபவர்களும்வெற்றிகரமான திட்டங்களாகக் கருதினார்கள். FAME IIஇன் குறைபாடுகளைக் களைந்து 2024இல் FAME III தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உற்பத்தியோடுஇணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளபதினான்கு துறைகளுக்கு அப்பால் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. இது மாற்றியமைக்கப்படும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சிகளுக்குத் துணைபுரியும் வகையில், அரசாங்கம் மின்சாரவாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைவரியை (GST) 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தல், மின்சார வாகனங்களுக்கு அனுமதிதொடர்பான தேவைகளிலிருந்து விலக்கு அளித்தல், மின்வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான சேவையாக மின்சாரத்தை விற்கஅனுமதித்தல் போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்வாகனங்களை வாங்குவதற்கான கடன்களுக்குக் கூடுதல் வருமான வரிவிலக்குகள் போன்ற பட்ஜெட் ஒதுக்கீடுகள்மின்வாகனப் பயன்பாட்டுக்கு மாறுவதை மேலும் ஊக்குவிக்கின்றன. நெடுஞ்சாலைகளில் 25 கி.மீஇடைவெளியில் மின்னேற்ற நிலையங்கள் அமைத்தல்போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடும் இவற்றுக்கு அளிக்கப்படும் வரித் தள்ளுபடிகளும் முன்னுரிமைநடவடிக்கைகளில் அடங்கும்.

தேவைக்கேற்றஊக்கத்தொகைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான (R&D) ஆதரவு, தொழிலாளர் ஊக்கத்தொகைகள், உள்கட்டமைப்புமேம்பாடு உள்ளிட்ட தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டகொள்கைகளை உருவாக்குவதன் மூலம் மாநில அரசுகளும்மின்வாகனப் பயன்பாட்டை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மின்வாகனப் பதிவுகளில் முன்னணி வகிக்கும் கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உள்ளூரில் மின்வாகனங்களுக்குத் தேவையானகட்டமைப்புகளை வளர்ப்பதற்கும் விரிவான கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பிற நாடுகளில் உள்ள கொள்கைகள்
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றமுக்கியப் பொருளாதாரங்கள் செயல்படுத்தும் கொள்கைகளில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கானஉலகளாவிய உந்துதல் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கப் பணவீக்கக் குறைப்புச் சட்டம் (IRA), சீனாவின் புதிய எரிசக்தி வாகனச்சட்டம் (NEV), ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழலைமாசுபடுத்தாமல் இருப்பதற்கான நிகர-பூஜ்ஜிய தொழில்சட்டம் (NZIA) ஆகியவை சர்வதேச வர்த்தகத்திற்கும்போட்டிக்குமான பல்வேறு உத்திகளையும் தாக்கங்களையும்சுட்டிக்காட்டுகின்றன. சுத்தமான எரிசக்தி, மின்வாகனப்பயன்பாடு ஆகியவற்றை நோக்கிய உலகளாவியமாற்றத்தையும் இவை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொருபிராந்தியத்தின் அணுகுமுறையும் அதன் தனித்துவமான முன்னுரிமைகளுக்கேற்பஅமைந்திருக்கிறது. நிதி ஊக்கத்தொகைகள், உள்கட்டமைப்புமேம்பாடு, மூலோபாய வர்த்தகக் கொள்கைகள்ஆகியவை அனைத்து இடங்களிலும் பொதுவாகஉள்ளன.

மின்வாகனப்பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சராசரி எரிபொருள் சிக்கனம் (CAFE) தொடர்பான தரநிலைகள், தேசிய மானியத் திட்டம்போன்ற கொள்கைகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியைவலியுறுத்தி, காலநிலை தொடர்பாகவும் சுத்தமானஎரிசக்தி முதலீடுகளுக்கும் 370 பில்லியன் டாலர்களை பணவீக்கக்குறைப்புச் சட்டம் ஒதுக்கியது. மே 2024 நிலவரப்படி சீன மின்சார வாகனங்களுக்கானஇறக்குமதி வரிகளை 100 சதவீதமாக உயர்த்துவது போன்றதற்காப்பு நடவடிக்கைகள், உலகளாவிய மின்சார வாகனச்சந்தைகளில் அமெரிக்காவின் போட்டித் திறனை வலுப்படுத்தும்முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்பின் நிர்வாகம் பணவீக்கக் குறைப்புச்சட்டத்தை அகற்றத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பியஒன்றியத்தின் NZIA அதன் தொழில்துறையின் போட்டித்தன்மையைமேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; குறிப்பாக பேட்டரி, சேமிப்புத்தொழில்நுட்பங்களில். முக்கியமான மூலப்பொருட்களுக்கான ஐரோப்பியச்  சட்டத்தின் உதவியுடன் NZIA விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் வளங்களைநம்பியிருப்பதைக் குறைப்பதற்காகக் கூட்டாண்மை முனைப்புகளைப் பன்முகப்படுத்துகிறது. 2024இல் நியாயமற்ற மானியங்கள், போட்டி நடைமுறைகள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி, சீன மின்வாகனங்களுக்கு வரிகளையும்ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.

சீனாவின் NEV கொள்கை மின்மயமாக்கலில் அது பெற்றிருக்கும் தலைமைஇடத்துடன் ஒருங்கிணைந்ததாகும். விரிவான மானியங்கள், பேட்டரிதொழில்நுட்பத்தில் முதலீடுகள், ஒழுங்குமுறை ஆணைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும்இந்தக் கொள்கை, லித்தியம் அடிப்படையிலானபேட்டரி விநியோகச் சங்கிலியின் குறிப்பிடத்தக்கபகுதிகளை உள்ளடக்குகிறது.

மின்வாகனஉற்பத்தியில் சீனாவின் ஆதிக்கம் அதன்வாகனத் துறையை மேம்படுத்துவதற்கும் காற்றுமாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் அது வகுத்துள்ள முன்னுரிமைகளுடன்ஒத்துப்போகிறது. சீனா இப்போது மின்சாரவாகனங்கள், சோலார் பேனல்களுக்கான பேட்டரிஉற்பத்தியில் முன்னணியில் உள்ளது. மின்வாகனச் சந்தையில்அதன் நிலையை உறுதிப்படுத்த, நுகர்வோர்மின்னணுவியல் உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட லித்தியம்-அயன்பேட்டரி உற்பத்தியில் தனக்குள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

மற்ற நாடுகளில் கொள்கை சார்ந்தஆதரவில் மின்வாகனங்களை வாங்குவதற்கான ஆதரவு, மின்வாகனங்களுக்கு மின்னேற்றம்செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும். ஒருசில நாடுகள் வேதியியல்ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும்ஏற்பாட்டைக் காருக்குள் பொருத்தும் போக்கைக் குறைக்க முயற்சிக்கின்றன. நேரடி ஆதரவு நடவடிக்கைகளில் கொள்முதல்மானியங்கள், இறக்குமதி வரி விலக்குகள், மின்சார வாகனங்களுக்கான கொள்முதல் மற்றும் இயக்கம்சார்ந்த வரி விலக்குகள் ஆகியவைஅடங்கும். சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்காவைத்தவிர மற்ற ஜி20 நாடுகள், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை ஆதரிப்பதற்கானவழிமுறைகளைச் செயல்படுத்தியுள்ளன. உதாரணமாக, பிரான்சும் இத்தாலியும் "மாலஸ்" அமைப்பு போன்ற மறைமுகநடவடிக்கைகளைப் பயன்படுத்துகின்றன, இது அதிக கரியமிலவாயு உமிழ்வு கொண்ட வாகனங்களுக்குஅதிக வரிகளை விதிக்கிறது.

கொள்கைகளின்செயல்திறனும் சவால்களும்
பிரேசில், இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா போன்றநாடுகள் சீனாவின் பசுமைத் தொழில்துறைக்கொள்கையைப் பின்பற்ற முடியுமா? வளர்ந்துவரும்இந்த மூன்று பொருளாதாரங்களும் கட்டமைப்புரீதியாக வேறுபட்ட வாகனத் தொழில்கள், உள்நாட்டில் நிலவும் சூழ்நிலைகள், கொள்கைமற்றும் நிறுவனங்கள் சார்ந்த எதிர்வினைகள், தொழில்துறையின்தொடக்க நிலை மேம்பாட்டு விளைவுகள்ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இந்தியாவில், FAME போன்ற தேசியக் கொள்கைகளும் உள்ளூர்முயற்சிகளும் மின்வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்பை ஆதரிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் போன்றஉள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியாளர்கள்உருவெடுப்பதை எளிதாக்கியுள்ளன. இந்தியாவில் உள்நாட்டு ஆட்டோமொபைல் பிராண்டுகள்இருப்பதால், மின்சார வாகன விநியோகச்சங்கிலியில் முதலீட்டு அளவு பிரேசிலையும்குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவையும்விட அதிகமாக உள்ளது. சீனாவுடன்ஒப்பிடும்போது இந்திய மின்சார வாகனச்சந்தை சிறியது: 2019இல் இந்தியாவில் 0.6 மில்லியன்மின்வாகனங்கள் விற்பனையாயின. அதே ஆண்டில் சீனாவில் 250 மில்லியன் மின்வாகனங்கள் விற்றன. மேலே குறிப்பிட்டுள்ளஇந்திய முயற்சிகள் மின்வாகனப் பயன்பாட்டின் வளர்ச்சியைத் தூண்டினாலும், மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பைமுழுமையாக வளர்ப்பதற்கு அவை போதுமானவைதானா என்பதுகுறித்த முக்கியமான கேள்விகள் இன்னும் உள்ளன.

மின்சார வாகனத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காகஇந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுமையங்களை நிறுவியிருந்தாலும், சீனாவுடனும் அமெரிக்காவுடனும் ஒப்பிடும்போது அதன் கல்வித்துறை சார்ந்தபுதிய வெளிப்பாடுகளும் காப்புரிமை நடவடிக்கைகளும் குறைவாகவே உள்ளன. பெரும்மாற்றங்களுக்கு உள்ளாகும் தொழில்துறையின் வாழ்வில்புதுமையை விரும்புபவர்கள், தொடக்கத்தில் அதில் ஈடுபடுபவர்கள், அடுத்தடுத்தவளர்ச்சி நிலைகள் ஆகியவை இருக்கும். இந்தியாவில், மின்சார வாகனத் துறைமுக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளது, அடுத்த சில ஆண்டுகளில்உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லித்தியம்-அயன் பேட்டரிகள், மின்சாரவாகன உற்பத்திக்கான மூலதனப் பொருட்கள் மீதானசுங்க வரி குறைப்பு போன்றஅரசாங்க நடவடிக்கைகள் இந்த மாற்றத்தை விரைவுபடுத்தத்தயாராக உள்ளன. இந்த ஆண்டுபட்ஜெட்டில் 25 முக்கியமான கனிமங்களுக்குச் சுங்க வரி விலக்குகள்வழங்கப்பட்டுள்ளன. முக்கியமான கனிமங்களுக்கான செயல்திட்டக் குழு நிறுவப்பட்டுள்ளது, இதுபேட்டரி உற்பத்திக்கு உதவும்.

இந்தியாவின்நிலக்கரி சார்ந்த மின்சாரக் கலவைமின்சார வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகளையும்பாதிக்கிறது. இந்தச் சவால்களை எதிர்கொள்ள, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரத் துறையின்கார்பன் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றில்கணிசமான முதலீடு தேவைப்படும். இந்தத்துறையின் வளர்ச்சிக்கான உந்துதலைத் தக்கவைக்க ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதும் மலிவுவிலையில் மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதும் அவசியம். உலக அளவில், மின்சார வாகனச் சந்தையில் நடக்கும்போட்டி புவிசார் அரசியல் பதற்றங்களுக்குவழிவகுத்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனமின்சார வாகனங்களுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன. முக்கியமான கனிமங்கள்மீது சீனா ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைவிதித்திருக்கிறது. தொழில்துறைக் கொள்கை சர்வதேச வர்த்தகஇயக்கவியலில் குறுக்கிடுவதை இந்த நடவடிக்கைகள் விளக்குகின்றன.

முடிவாக
2024ஆம் ஆண்டின் முதல் பதினொருமாதங்களில், உலகளாவிய மின்சார வாகனம், மின்சாரத்தையும் இதர வழிகளையும் பயன்படுத்தும்வாகனம் ஆகியவற்றின் விற்பனையில் 70 சதவீதம் சீனாவில் நடந்தது. சீனாவின் வர்த்தக உபரி கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் என்ற உச்சத்தில்இருந்தது. புதிய அமெரிக்க நிர்வாகம்சீனாமீதும், இரும்பு, எஃகு மற்றும்அலுமினியம் போன்ற குறிப்பிட்ட துறைகள்மீதும்விதித்திருக்கும் வரிகள், இந்தச் சந்தைகளைமறுவடிவமைக்கும் முயற்சியாகும். முன்னதாக, நியாயமற்ற மானியங்களையும்போட்டி நடைமுறைகளையும் காரணம் காட்டி ஐரோப்பியஒன்றியம் சீன மின்சார வாகனங்களுக்குவரிகளை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காஉள்ளிட்ட சில இடங்களில் சீனமின்சார வாகனங்களைப் பற்றிய பிற கவலைகள்உள்ளன. பிரேசில், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா ஆகியவை சீனாவின் ஏற்றுமதியில்பெரிய தடைகளை விதித்துள்ளன; தங்களதுபுதிய தொழில்கள் சீனத் தாக்குதலால்முடங்கிவிடும் என்று அஞ்சுகின்றன. முக்கியமானகனிமங்களின் ஏற்றுமதியைத் தடை செய்வதன் மூலமும், இப்போது மின்னணுவியல், சோலார் பேனல்கள், மின்சாரவாகனங்களுக்கான இயந்திரங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் சீனா இந்தநடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுத்தது.

இந்தியாவின்மின்சார வாகனக் கொள்கைகள் பசுமைஆற்றலுக்கு மாறுவதற்கான தொடர்ச்சியான முயற்சியைப் பிரதிபலிக்கின்றன, FAME II, PLI (உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை) திட்டங்கள், மாநில அளவிலான ஊக்கத்தொகைகள் போன்றமுயற்சிகள் அதன் மின்வாகனச் சந்தைக்கானவியூகத்தின் முதுகெலும்பாக அமைகின்றன. இருப்பினும், பேட்டரித் தொழில் புதிதாகஉருவாகிவரும் நிலையில் இருப்பது, மின்னேற்றத்திற்கனபோதுமான உள்கட்டமைப்பு இல்லாதது, நிலக்கரி சார்ந்தமின்சார உற்பத்தி போன்ற சவால்களைச்சமாளித்தால்தான் மின்வாகனப் பயன்பாட்டைக் கைக்கொள்வதன் முழுத் திறனையும் உணரமுடியும். மேலும், இந்திய நுகர்வோர்விலை விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள். மின்சாரக்கார்களோ அதிக விலை கொண்டவை.

மின்வாகனங்களைப்பயன்படுத்துவதன் முழுத் திறனையும் உணரச்சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும். இந்தியாவின் வாகனத் துறையில் குறிப்பிடத்தக்கபகுதியைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு, மின்வாகனங்களின்பாகங்களுக்கான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தஅவர்களுடைய தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட சலுகைகள் தேவைப்படுகின்றன. பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்குஅவர்களின் வாகனத் தொழில்கள், கொள்கைச்சூழல்களில் உள்ள கட்டமைப்பு வேறுபாடுகள்காரணமாக சீனாவின் பசுமைத் தொழில்துறைக்கொள்கைகளைப் பின்பற்றுவதில் சவால்கள் உள்ளன. தென்அமெரிக்காவின் அசெம்பிளி மையமாகச் செயல்படும்வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEMs) ஆதிக்கம் செலுத்தும் பெரிய ஆட்டோமொபைல் துறையைபிரேசில் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் சிறு தொழில்துறை ஐரோப்பாவிற்கானஏற்றுமதியில் கவனம் செலுத்துகிறது. உள்நாட்டுஅம்சங்களைக் குறைவாகக் கொண்டுள்ள இந்தத்துறை, இறக்குமதி செய்யப்பட்ட கூறுகளைஅதிகமாகச் சார்ந்துள்ளது. இந்த மூன்று நாடுகளில்இந்தியா வலுவான ஆட்டோமொடிவ் வாகனஉதிரிபாகங்கள் துறையைக் (முக்கியமாக ICE) கொண்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் இதில் 70 சதவீத வருவாயைஉருவாக்குகின்றன.

மின்வாகனப்பயன்பாட்டைக் கைக்கொள்ளும் மாற்றத்திற்கான இந்தியாவின் பாதை புவிசார் அரசியலையும்சார்ந்துள்ளது. இதில் முக்கியமான கனிமங்கள், தொழில்நுட்பம், நிதியுதவி ஆகியவற்றைப் பெறுவதும்அடங்கும். இந்த மாற்றம் கரியமலவாயு உமிழ்வுக்கான இலக்குகளுடன் ஒத்துப்போவதை உறுதிசெய்வதற்குக் கொள்கை, தொழில், கல்வித்துறைஆகியவை ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படும். வளங்களையும் தொழில்நுட்பத்தையும் பாதுகாக்கச் சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். இந்தச் சவால்களை எதிர்கொண்டு தீர்ப்பதன்மூலம், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாகனப் பயன்பாட்டைநோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இந்தியாதன்னைத் தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.

மின்சார வாகனத்திற்கான உலகளாவிய சூழல் உருவாகும்போது, ​​இந்தியாவின் தொழில்துறைக் கொள்கை, உடனடி ஊக்கத்தொகைகளுக்கும்நீண்டகால நோக்கிலான சுற்றுச்சூழல் பாதுகாப்புஇலக்குகளுக்கும் இடையில் சமநிலைகாண வேண்டும். சீனாவின் சந்தை உத்திகள், அமெரிக்காவின்ஊக்கமளிக்கும் கட்டமைப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைக்கட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து பாடங்களைப் பெற்று, போட்டித்தன்மை வாய்ந்ததும்சுற்றுச்சூழல் ரீதியாகப் பொருத்தமானதுமான மின்சாரவாகனக் கட்டமைப்பை உருவாக்க இந்தியா தனதுகொள்கைகளைச் செம்மைப்படுத்தலாம். உள்கட்டமைப்பில் கவனமாகத் திட்டமிட்ட முதலீடுகள், உலகளாவிய உற்பத்தியாளர்களுடன் கூட்டாண்மைகள், உள்ளூர்க் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பதுஆகியவை இந்தியாவின் மின்சார வாகனத் துறையின்எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமானவையாக இருக்கும். இந்தியா தொடர்ந்து தனதுகொள்கைகளைச் செம்மைப்படுத்திவருவதால், இந்தப் பாடங்கள் பொருளாதாரவளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஆதரிக்கும் பயனுள்ள நடைமுறைக்கு வழிகாட்டும்.

சாவன் ராய்

Author

சாவன்ராய், புது தில்லியில் உள்ள இந்திய சர்வதேசப் பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICRIER) பேராசிரியராக உள்ளார். A Primer on Electric Vehicles in India: A Machine-Generated Literature Overview 2025th Edition (ஸ்பிரிங்கர்வெளியீடு, 2024) நூலின் இணை ஆசிரியர்.

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்