2023 பிப்ரவரியில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி "செயற்கைநுண்ணறிவின் (AI) மூலம் தீர்க்கக்கூடிய சமூகத்தின்பத்துப் பிரச்சினைகளை அடையாளம் காண" குடிமக்களுக்குஅழைப்பு விடுத்தார். கடந்த பதினைந்து ஆண்டுகளாகஇந்தியாவின் டிஜிட்டல் பயணத்தின் உந்துசக்தியாக இருந்த ஐடி துறைவல்லுநர் நந்தன் நீலேகனி, இந்தியாவிரைவில் "AI பயன்பாட்டில் உலகின் தலைநகராக" மாறும்என்று 2024ஆம் ஆண்டில் அறிவித்தார். ஜனவரி 2025இல், மின்னணு மற்றும்தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் IndiaAI திட்டம், இந்திய அடிப்படைமாதிரிகளை உருவாக்கும் முன்மொழிவுகளுக்கான அழைப்பை வெளியிட்டது. இவைஉள்ளடக்கங்களை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) வளர்ச்சிக்கு அடித்தளமாகஇருக்கக்கூடிய மென்பொருள்கள். இதற்கான முக்கியமான அளவுகோலாக, "சமூகத்தின் சவால்களைச் சமாளிக்கக்கூடிய பயன்பாட்டுச் செயல்முறைகளை அடையாளம் கண்டு விளக்கும்” திறன் குறிப்பிடப்பட்டது. கடந்த மாதம், கேட்ஸ்அறக்கட்டளையும் IndiaAI திட்டமும் இணைந்து "பயிர்களைமேம்படுத்துவதற்கான AI தீர்வுகள், வலுவான சுகாதாரம், சிறந்தகல்வி, காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல்" குறித்த கூட்டுச் செயல்திட்டத்தை அறிவித்தன.
சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான AI பயன்பாட்டுச்செயல்முறைகள் அல்லது பயன்பாடுகள் குறித்த விவாதம் இந்தியாவின் AI கொள்கையின்மிகவும் தனித்துவமான கூறுகளில் ஒன்று. விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய முக்கியமானதளங்களில் காலனித்துவத்திற்குப் பிந்தைய வளர்ச்சியின் கடினமானசிக்கல்களை AI மூலம் "தீர்க்க" இது உறுதிபூண்டுள்ளது. இதுகிராமப்புற இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சியைஉலகளாவிய AI தொழில்நுட்பத்தின் அதிநவீன தொழில்துறை உத்தியுடன்தர்க்க ரீதியாக இணைக்கிறது. இருப்பினும், அரசியல் பொருளாதாரம் பற்றிய கணக்கு இல்லாததால், "பயன்பாட்டுச் செயல்முறைகள்" சார்ந்த அணுகுமுறை பலவீனமானகொள்கைத் திட்டத்தை உருவாக்க வழிவகுக்கிறது. வசீகரமான இந்தத் திட்டம் வெறும்பரப்புரையாகவே செயல்படுகிறது; இது வளர்ச்சிக்கு உதட்டளவில்மட்டுமே சேவை செய்கிறது. புவிசார்அரசியல் தலைமை குறித்த உரிமைகோரல்கள்முதல், புதிய இணையப் பயனாளிகளைச் சந்தைப்படுத்துதல்வரைபல்வேறு அம்சங்களில் அரசின் தலையீடுகளை நியாயப்படுத்துவதற்கேபெரிதும் பயன்படுகிறது.
வறுமையைச் சந்தைப்படுத்தலும் இந்தியாவின் வியூகமும்
இந்தியாவில்ஆதார் டிஜிட்டல் அடையாள அமைப்பைத்தொடர்ந்து வந்த வளர்ச்சியின் டிஜிட்டல்மயமாக்கல் AI பயன்பாட்டுச் செயல்முறைகள் பற்றிய உரையாடலுக்கான முன்னறிவிப்பாகஉள்ளது. இந்தியாவின் உரிமைகள் சார்ந்த மக்கள்நலத்திட்டச் செயல்முறையை நெறிப்படுத்த உறுதியளிக்கும் நடவடிக்கையாக 2009இல் தொடங்கப்பட்ட ஆதார், கோடிக்கணக்கான இந்தியர்களை டிஜிட்டல் அமைப்புகளின் எல்லைக்குள்கொண்டுவந்தது. மென்பொருள் துறையில் இதை முன்னெடுத்தவர்கள், குறிப்பாக 2015இல் IndiaStack திட்டம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, நிதி அம்சங்களும் இதில் உள்ளடக்கப்படும் என்னும்வாக்குறுதியைப் பயன்படுத்தி, இந்திய மென்பொருள் மற்றும்நிதித் துறைக்கு இந்த டிஜிட்டல்மயமாக்கப்பட்டஇந்தியர்களை வாடிக்கையாளர்களாக அணுகுவதற்கான வாய்ப்பைச் சட்டப்பூர்வமாக்கினார்கள். டிஜிட்டல்மயமாக்கத்தில் தனியார் கடனைப் பெறக்கூடியவாய்ப்பு இருப்பதால், இந்தியாவில் உள்ள ஏழைகளால் "வறுமையிலிருந்துதங்களைத் தாங்களே மீட்டுக்கொள்ளும்" வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
வறுமைஇன்னமும் மிகப்பெரிய சவாலாகவே இருந்தாலும், அரசு-தனியார் கூட்டிணைவில் உருவாகும்உள்கட்டமைப்பில் அரசு செய்யும் முதலீடு, மென்பொருள் துறையில் விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, புதிய நிதி-தொழில்நுட்பத்துறையை உருவாக்கியுள்ளது. ஆதார் திட்டமும் இதேபோன்றஅமைப்புகளும் தங்களது இலக்கை எட்டியது, பாஜகவின் "புதிய நலப்பணித் திட்டங்களின்” எழுச்சியைப் பறைசாற்றியது. பொது சுகாதாரம், ஆரம்பக்கல்வி போன்ற பொதுவான சேவைகளிலிருந்துவிலகி, எரிவாயு சிலிண்டர்கள் போன்றதனிநபர் சார்ந்த பொருட்களுக்கான பணப்பரிமாற்றங்களை வழங்கும் மாற்றத்தையும் இதுகொண்டுவந்தது. "டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு" என்று மறுபெயரிடப்பட்ட இந்த அமைப்புகள், வளர்ச்சியில்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு மாதிரியாக உலகம்முழுவதும் பின்பற்றப்படுகின்றன. இந்த அணுகுமுறையை அடிப்படையாகக்கொண்டு – மாநில அளவிலும் தொழில்துறையிலும்இதேபோன்ற பங்கேற்பாளர்களால் இது முன்னெடுக்கப்படுகிறது - AI "பயன்பாட்டுச் செயல்முறை" என்ற சொல்லாடல் இந்தியாவின்சமூகச் சவால்களை மென்பொருள் முதலாளிகள்செயலாற்றுவதற்கான வள ஆதாரமாகவடிவமைக்கிறது.
நடைமுறையில், இந்தக் களங்களில் AI பயன்பாட்டுச் செயல்முறைகள் பெரும்பாலும் ஊகத்தின் அடிப்படையிலானவை. எடுத்துக்காட்டாக, விவசாயத்தில், டஜன் கணக்கான வட்டாரமொழி சாட்போட்கள் வானிலை, நடவு நேரங்கள்ஆகியவை குறித்து விவசாயிகளுக்குச் சிறப்பாகத்தெரிவிப்பதாக உறுதியளிக்கின்றன. சுகாதாரத்திலும் கல்வியிலும் AIயின் வாக்குறுதிகள் பெரும்பாலும்நிர்வாகச் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக, சுகாதாரம்சார்ந்த தகவல்களை டிஜிட்டல் முறையில்பதிவுசெய்வதற்கான மாற்றத்தை விரைவுபடுத்துதல். மருத்துவமனைகள், காப்பீட்டு வழங்குநர்களுக்குப் பெருமளவிலான தரவுகளை வழங்கும்போது இதன்செயல்திறனை மேம்படுத்த வேண்டியிருக்கும்.
சோதிக்கப்பட்டபயன்பாடுகள் இல்லாதபோதிலும், AI பயன்பாட்டுச் செயல்முறைகள் தொடர்பான உரையாடல்கள், எண்ணற்றஏழைகளைக் கொண்ட பரந்த சந்தையைஉலகளாவிய AI ஆயுதப் போட்டியில் இந்தியாமுக்கிய இடம் பெறக்கூடிய வாய்ப்பாகச்சித்தரிக்கின்றன. தரவுத் தொகுப்புகள், மாதிரிகள், கணினி ஆற்றல் ஆகியவற்றால் ஆன AI விநியோகச் சங்கிலி, அமெரிக்காவின் ஒரு சில பெரியதொழில்நுட்ப நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பல மாநிலங்கள்தொழில்துறைக் கொள்கைகளை உருவாக்க வழிவகுக்கிறது. இந்தியாவின் வறுமைச் சந்தையில் ஏழைமக்கள் தரவுகளைப் பயன்படுத்துபவர்களாகவும் தரவுகளை வழங்குபவர்களாகவும்கருதப்படுகிறார்கள். வளர்ச்சி ஒரே இடத்தில்குவிந்துவரும் போக்கு அதிகரித்துவரும் உலகளாவிய AI சந்தையில் இந்தியாவின் போட்டியிடும் திறனை அதிகரிக்கக்கூடியதாக இந்தியாவின்வறுமைச் சந்தை கற்பனை செய்யப்படுகிறது. குறைக்கடத்தி உற்பத்தி, கிளவுட் வளஆதாரங்கள் ஆகியவற்றில் உள்நாட்டுத் திறன்களை உருவாக்குவதற்குப் பெரும்ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட பாரம்பரியமான வழிகளையேஇந்திய AI தொழில்துறைக் கொள்கை நம்பியுள்ளது. ஆனால்இந்திய AI பொருளாதாரத்தை முன்னெடுப்பவர்கள் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கானமென்பொருள் பயன்பாடுகளிலிருந்து வெளிப்படுவதாக "பயன்பாட்டுச் செயல்முறை" குறித்த உரையாடலில் கற்பனைசெய்யப்படுகிறார்கள். "AI துறையில் இந்தியாவின் திறன் வெளிப்படச்செய்வதற்கான வழிமுறை, தொழில்நுட்பத்தை மிகவும் தீவிரமாக அணுகுவதல்ல; மாறாக, நடப்பிலுள்ள தொழில்நுட்பத்தால் தீர்க்க முடியாத மக்கள்பிரச்சினைகளைப் பார்ப்பது" என்று நீலேகனி 2023இல்அறிவித்தார்.
அதாவது, பயன்பாட்டுச் செயல்முறைகளால் ஏற்படக்கூடிய விளைவுகள், வறுமையின் சந்தைப்படுத்தலுக்கும், இந்தியாவை உலகஅளவில் அதிநவீனத் தொழில்நுட்பத்தில் போட்டியிடும்திறன் கொண்டதாக மாற்ற முடியும்என்னும் நம்பிக்கையுடன் இருக்கும் தேசியத் தொழில்துறைக்கொள்கைக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறது.
AI பயன்பாட்டுச் செயல்முறைகளின் அரசியல் பொருளாதாரம்
இதுஉண்மையாக இருக்க முடியாது என்னும்அளவுக்கு மிகையான கூற்றாக உள்ளது. AI பயன்பாட்டுச் செயல்முறைகள் பற்றிய உரையாடல்கள், AI துறை, பொதுவான வளர்ச்சி ஆகிய இரண்டின்அரசியல் பொருளாதாரத்தையும் புறக்கணிக்கின்றன. இந்தியாவின் தொழில்நுட்பக் கோட்பாட்டில் முக்கிய மையமாக இருக்கும் AI இறையாண்மையின் கண்ணோட்டத்தில், குறைக்கடத்திகள், கிளவுட் வளங்கள், மாதிரிகள்ஆகியவை அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின்கைகளிலேயே குவிந்திருக்கும் நிலை நீடித்தால், "உலகின் AI பயன்பாட்டுச் செயல்முறைகளின் மூலதனமாக" இந்தியா மாறுவதற்குச் சாத்தியம்இல்லை. இன்றைய ஜெனரேட்டிவ் AI, மற்றடிஜிட்டல் தொழில்நுட்பங்களைவிடவும், Nvidia என்னும் ஒற்றை நிறுவனம்விற்கும் குறைக்கடத்திகளில் இயங்குகிறது. இந்தக் குறைகடத்திகள் தைவானில்உள்ள TSMC என்னும் தொழிற்சாலையில் டச்சுஉற்பத்தியாளரான ASML தயாரித்த உபகரணங்களால் உருவாக்கப்பட்டவை. தவிர, AIக்குத் தேவையான கிளவுட்கம்ப்யூட்டிங் தரவு மையங்களும் மாதிரிகளும்அமேசான், மைக்ரோசாப்ட், கூகிள் ஆகியவற்றால் பெருமளவில்கட்டுப்படுத்தப்படுகின்றன.
AI பயன்பாடுகள்உள்நாட்டு ஸ்டார்ட்அப் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கானஒரு வழியாகக் கற்பனைசெய்யப்படுகின்றன. ஆனால் AI துறையிலும் அதற்குஅப்பாலும் உள்ள பெரும்பாலான இந்தியஸ்டார்ட்அப்கள் வறுமையைச் சந்தைப்படுத்துவதில் ஆர்வம்காட்டுவதாகத் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள 120க்கும் மேற்பட்டஜெனரேட்டிவ் AI ஸ்டார்ட்அப்களிடையே 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்டஆய்வு, கடந்த ஐந்து ஆண்டுகளில்மொத்தமாக $1.2 பில்லியனுக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளநிறுவனங்களில் 70 சதவீத நிறுவனங்கள், நிறுவனரீதியான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தீர்வுகளை வழங்குகின்றனஎன்பதைக் காட்டுகிறது. இந்தியத் தொழில்நுட்பம் பெரும்பாலும்நிறுவன ரீதியான சேவைகளிலேயே அதிககவனம் செலுத்திவருகிறது. இந்த வழக்கத்தை அடியொற்றிஇந்தத் துறை, நுகர்வோருக்கான மென்பொருள்தயாரிப்புகளில் அல்லாமல் பெரும்பாலும் தொழில்துறையில்பயன்படுத்துவதற்கான பின்தள மென்பொருள் கூறுகளிலேயேகவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. இந்நிலையில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்குஇவற்றைப் பயன்படுத்துவது குறித்து யோசிக்கவே முடியாது.
இதுதுறை சார்ந்த தரவுகளில் பிரதிபலிக்கிறது. பரபரப்பான சூழ்நிலை இருந்தபோதிலும், ஜெனரேட்டிவ் AI ஸ்டார்ட்அப்களுக்கான முதல் ஐந்து துறைப்பயன்பாடுகளில் ஒன்றாக விவசாயம் கருதப்படவில்லை. கல்வியும் சுகாதாரப் பராமரிப்பும் முதல்ஐந்து இடங்களில் இடம்பெற்றிருந்தாலும், இவைநடுத்தர வர்க்கத்தினருக்கும் உயர் வகுப்பினருக்கும் லாபகரமானசந்தைகள்; இந்தத் துறைகளில் உள்ள AI ஸ்டார்ட்அப்கள் நட்டின் வளர்ச்சிக்கான இலக்குகளைக்கொண்டிருப்பது சாத்தியமில்லை (இது தொடர்பாகத் தெளிவுபெறுவதற்குமேலும் தரவுகள் தேவைப்படுகின்றன). ஸ்டார்ட்அப்கள், துணிகர முதலீட்டாளர்கள் ஆகியோர் தங்கள் முதலீட்டுக்குலாபம் கிடைக்க வேண்டும் என்பதில்தான்முனைப்பாக இருப்பார்கள். அறிவிக்கப்பட்ட AI பயன்பாடுகளுக்கான பயனர்களாகக் கருதப்படும் இந்தியர்கள், குறிப்பாக மிகவும் ஏழைகள், ஸ்டார்ட்அப் வணிக மாதிரிகளுக்குப் பயன்படக்கூடியவர்கள்அல்ல. சமீபத்திய துணிகர முதலீட்டுஅறிக்கை கூறியது போல், கோடிக்கணக்கானஏழை இந்தியர்களை வைத்துஸ்டார்ட்அப் நிறுவனங்களால் "லாபம் பார்க்க முடியாது".
சமூக-பொருளாதார வளர்ச்சி தொடர்பானபிரச்சினைகளைத் தீர்க்க AI பயன்பாட்டுச் செயல்முறைகளைப் பயன்படுத்துவது தவறான முயற்சியாகவே இருக்கும். விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில்வேரூன்றிய சிக்கல்களுக்கு AIயால் அளிக்கக்கூடிய விரைவானதொழில்நுட்பத் தீர்வுகளைவிடவும் அடிப்படையான கட்டமைப்புச் சீர்திருத்தங்களே தேவை. வளர்ச்சி தொடர்பானபிரச்சினைகளைத் தீர்க்க ஆதார் போன்றடிஜிட்டல் அமைப்புகளை நம்பியிருப்பது ஏழைகளுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களுக்கு அதிகதீங்கு விளைவித்திருக்கக்கூடும் என்பதையே கடந்த பத்துஆண்டுக் காலச் சான்றுகள் காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, மென்பொருள் போன்றகுறைவான வேலைவாய்ப்பை அளிக்கும் துறைகளிலேயே பொருளாதாரவளர்ச்சி பல பத்தாண்டுகளாகக்குவிந்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக்குப் பிறகும்இந்தியர்களுக்குப் பெருமளவிலான வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. AI பயன்பாடுகள் இதை வழங்காது.
AI பயன்பாட்டுச் செயல்முறைகள் என்னும் மிகையுரை
எனவே, AI பயன்பாட்டுச் செயல்முறைகளில் கவனம் செலுத்துவதை மிகையானவாக்குறுதியாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த மிகையான கூற்றாகவேஇதைப் பார்க்க வேண்டும். கற்பனைசெய்யவே முடியாத, மனிதகுலத்தை அச்சுறுத்தும்திறன்களைக் கொண்ட "செயற்கை பொது நுண்ணறிவு" உருவாகவிருக்கிறது என்பதாக அமெரிக்காவில், AI தொடர்பானமிகைப்படுத்தல் உள்ளது. இது மிகவிரைவில் நிகழவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஊதிப்பெருக்கப்பட்ட வாக்குறுதிகள், தொழில்நுட்பத்திற்கான நிரூபிக்கப்பட்ட தேவை குறைவாக இருந்தபோதிலும், ஊக முதலீட்டில் மிகப்பெரியஎழுச்சியை ஏற்படுத்தியுள்ளன; AI நிறுவனங்களின் சந்தை மதிப்பீடுகளையும் புதியஉச்சத்திற்கு எடுத்துச்சென்றுள்ளன.
இதற்குநேர்மாறாக, AI மூலமாக வளர்ச்சி என்னும்கூற்று நியாயமான, சமூக-பொருளாதாரரீதியாக அடிப்படையான மாற்று வழிமுறையை வழங்குவதாகத்தெரிகிறது. எதிர்காலத்தை நோக்கி மட்டுமின்றி, முதலாளித்துவஅமைப்பையும் நோக்கி இது பேசுகிறது. பொருளாதார வளர்ச்சியின் விளிம்பில் இருப்பவர்கள் தரவுகளுக்கான ஆதாரமாகவும் AI பயன்பாடுகளுக்கான சந்தையாகவும் செயல்பட முடியும் என்றுஇது உறுதியளிக்கிறது.
அமெரிக்காவில் AI தொடர்பான மிகைப்படுத்தல் பெரியஅளவில் முதலீட்டை ஈர்க்கவில்லை. அதுபோலவே இந்தியாவிலும் நடக்கலாம். எனினும், இது பல்வேறுசக்திவாய்ந்த கூறுகளுக்குப் பலனளிக்கிறது. அவை வருமாறு:
1. ஆளும் அரசாங்கத்திற்கு, இது கருணை மிகுந்த, தொழில்நுட்ப மேம்பாட்டுவாதத்தின் பிம்பத்தை அளிக்கிறது. இந்துதேசியவாதத்துடன், இந்த உயர் தொழில்நுட்பபிம்பம் தற்போதைய அரசாங்கத்தின் வசீகரமானமுழக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்துவருகிறது. இந்தியாவின் முன்மாதிரியான AI பயன்பாடுகள் சாட்பாட்களாக இருப்பது தற்செயலானதல்ல; அவைகுடிமக்கள் தங்களுக்கான சேவைகளைப் பெறுவதற்காக ஒருவரோடுஒருவர் தொடர்புகொள்ளும் இடைமுகத்தை வழங்கும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும்ஏற்ப வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள். மோடியின் தலைமையின் கீழ்அடிப்படை சுகாதாரம், ஆரம்ப சுகாதாரம் போன்றபொதுச் சேவைகளை வழங்குவதிலிருந்து விலகி, தொழில்நுட்பத்தின் மூலம் தனிப்பட்ட பொருட்களைவழங்குவதாக பாஜகவின் அணுகுமுறை மாறியிருக்கிறது. AI பயன்பாடுகளின் நடைமுறையும் இதை அடியொற்றியே அமைகிறது.
2. உலக அளவில், "AI பயன்பாட்டுச் செயல்முறை" என்ற குரல், அதிகாரத்திற்கானபெரிய போட்டியின் மத்தியில், உலகளாவிய பெரும்பான்மையின் சார்பாகஇந்தியா தார்மீகத் தலைமையைக் கோரஉதவுகிறது. நிதி ஆயோக் AI உத்திஇந்தியாவை "உலகின் 40 சதவீதத்திற்கான AI உற்பத்திமையம்" என்று வர்ணிக்கிறது. இதுஇந்தியா உள்நாட்டில் உருவாக்கும் AI பயன்பாட்டுச் செயல்முறைகள் உலகளாவிய தெற்கிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் என்பதைக் குறிக்கிறது.
3. வளர்ச்சிக்கான AI என்றமுத்திரையின் கீழ் உலகின் பிறஇடங்களில் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுத்துவரும்கேட்ஸ் அறக்கட்டளை போன்ற உலகளாவிய மேம்பாட்டுநிதி வழங்குநர்களுக்கு, AI பயன்பாடுகள் சார்ந்த அணுகுமுறை என்பதுவளர்ச்சியில் டிஜிட்டல் சார்ந்த நடவடிக்கைகளின்நீண்ட வரிசையில் அண்மையில் வந்துசேர்ந்தது. வறுமையைச் சந்தைப்படுத்துவதே அதைத்தீர்க்கும் வழி என்னும் பொதுநல முதலாளித்துவக்கோட்பாட்டிற்குள் இது சரியாகப் பொருந்துகிறது.
4. உள்நாட்டு மென்பொருள்துறையைப் பொறுத்தவரை, AI பயன்பாட்டுச் செயல்முறைகள் பற்றிய பேச்சு இந்தியாவிற்குள்புதிய டிஜிட்டல் மக்கள்தொகையை அரசுஆதரவுடன் சந்தைப்படுத்துதலைச் சட்டப்பூர்வமாக்குகிறது. இது வளர்ச்சி என்றபோர்வையில் குடிமக்களின் தரவைப் பிரித்தெடுக்க உதவுகிறது. இந்தத் தரவுகளின் நிதி சார்ந்தமதிப்பும் இந்த வாடிக்கையாளர்களும் கேள்விக்குரியவர்களாகஉள்ளனர். இது ஏழைகளை இவர்களுடையதயாரிப்புகளுக்கான சோதனைக் கருவிகளாக ஆக்குகிறது. அதே நேரத்தில் பிறவளரும் நாடுகளில் சாத்தியமான ஏற்றுமதிச்சந்தைகளையும் திறக்கிறது.
5. உலகளாவிய தொழில்நுட்பஜாம்பவான்களுக்கு இது இந்தியாவில் அவர்களின்செயல்பாடுகளைச் சட்டப்பூர்வமாக்க ஒரு பாதையை வழங்குகிறது. AI பயன்பாடுகளை மிகுந்த ஆர்வத்துடன் ஆதரிப்பவர்களில்ஒருவர் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரிசத்யா நாதெல்லா. அவர் சமீபத்தில்இந்தியா "உலகின் AI பயன்பாட்டுச் செயல்முறைக்கானதலைநகராக" மாறிவிட்டது என்று நீலேகனியைப் போலவேபேசினார். சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கானசெயல்பாட்டில் AIஇன் மிகவும் பரவலாகமேற்கோள் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒன்று, மைக்ரோசாப்டும் ஐஐடிமெட்ராஸும் இணைந்து உருவாக்கிய ஜுகல்பந்திசாட்பாட். இது அரசாங்கச் சேவைகள்பற்றி உள்ளூர் மொழிகளில் தகவல்களைவழங்குகிறது. 2023இல் மிகவும் பகட்டானபொது நிகழ்வொன்றில் இது வெளியிடப்பட்டது. இந்தசாட்பாட்டைப் பயன்படுத்துவது தொடர்பான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. 2023முதல் இது குறித்த எந்தச்செய்தியும் வெளியிடப்படவில்லை. திட்டத்தின் இணையதளமும் செயல்படவில்லை.
AI பயன்பாட்டுச்செயல்முறைகள் பற்றிய விவாதம் வசீகரமானது. ஏனெனில், ஏழைகள் ஏன் மிகவும்மேம்பட்ட தொழில்நுட்பத்திலிருந்து பயனடையக் கூடாது என்னும்அருமையான கேள்வியை அது எழுப்புகிறது. கெடுவாய்ப்பாக, சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவென்று தற்போதுமுன்வைக்கப்படும் AI பயன்பாடுகள் தற்போதைய சூழ்நிலையில் வெற்றிபெறாது. இதைப் பற்றிய மிகையான பரப்புரைகள்ஏழைகளுக்கோ அல்லது இந்தியாவின் AI லட்சியங்களுக்கோபயனளிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இது ஆதிக்கசக்திகளின் கட்டமைப்புகளைத் தொந்தரவு செய்வதில்லை; பெரியதொழில்நுட்ப நிறுவனங்கள் முன்னெடுக்கும் AI-ஐக்கு அடிப்படையாக அமையும்ஏகபோக நடைமுறைகளையும், இயற்கை வளங்களை வைத்துஅதிகபட்ச லாபமடையும் போக்கையும் இது கேள்விக்குட்படுத்தாது. அதற்குப் பதிலாக, இந்தத் துறையில் ஏற்கெனவே சக்திவாய்ந்தநிலையில் உள்ள பங்கேற்பாளர்களுக்குக் கூடுதலாகஅதிகாரம் அளிக்கிறது.
AI யுகத்தில்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சவால்விட்டு, ஏழைகளையும் ஓரங்கட்டப்பட்ட மக்களையும் மையப்படுத்தினால் எப்படி இருக்கும்? அப்படிச்செய்வதாக இருந்தால் மக்களை AIஇன்இறுதிப் பயனர்களாகவும் தரவு மூலங்களாகவும் சோதனைக்கருவிகளாகவும் கருதாமல், அதன் உரிமையாளர்களாகவும்தயாரிப்பாளர்களாகவும் கருத வேண்டியிருக்கும். தற்போதையஅமைப்பிற்கான உண்மையான மாற்றுகள் பெரும்பாலும்ஊகமாகவே இருக்கின்றன. எனினும், AI-ஐப் பொதுச் சொத்தாகக்கற்பனை செய்து அதற்கேற்பச் செயல்படுவதற்கானமுயற்சிகள், AI வளர்ச்சியானது சமூக-பொருளாதார நீதியுடன்கைகோர்த்துச் செல்வதற்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கானஉத்வேகத்தை வழங்கக்கூடும்.