இந்தியாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் மூன்று முகங்கள்

03/03/2025
IiT English Page

முஸ்லிம்களைமுஸ்லிம்கள் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமா? உணர்ச்சியைத்தூண்டக்கூடிய இந்தக் கேள்வி, சட்டமன்றஅமைப்புகளில் முஸ்லிம் எம்.பி.க்கள், எம்.எல்..க்களின்எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து அதிரடியான முறையில்வெளியாகும் பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்களால் கவனம் பெறாமல்போகிறது. மையநீரோட்டத்தைச்சேர்ந்த ஊடகங்களில் வெளியாகும் எழுத்துக்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுவதைமுன்னிலைப்படுத்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின்எண்ணிக்கையில் முழுமையாகக் கவனம் செலுத்துகின்றன. மறுபுறம், கல்வியாளர்களின் ஆய்வுகள், முஸ்லிம் பிரதிநிதித்துவக்குறைபாட்டை நிரூபிக்கப் புள்ளிவிவரத் தரவுகளைப் பெரிதும் நம்பியுள்ளன.

இந்த வாதங்கள் "நேரடியான பிரதிநிதித்துவம்" பற்றிய காலாவதியானபுரிதலை உறுதிப்படுத்துகின்றன. சட்டமன்ற அமைப்புகள் நாட்டின்சமூக-மத அடிப்படையிலானபன்முகத்தன்மையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்; அப்போதுதான் அவைசமுதாயத்தின் "கண்ணாடி பிம்ப"மாகஇருக்கும் என்பதே நேரடியான பிரதிநிதித்துவம்என்னும் கருத்தாகும். நேரடியான பிரதிநிதித்துவம் தொடர்பானவாதங்கள், பரந்த அளவில், மரபார்ந்தஆய்வுகளிலிருந்தே உருவாகின்றன. ஒருமித்த தன்மை கொண்டமுஸ்லிம் சமூகத்தின் கூட்டு நலன்களைச் சட்டமன்றங்களில்உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளால் மட்டுமேபாதுகாக்க முடியும் என்று இவைகூறுகின்றன. எளிமைப்படுத்தப்பட்ட இந்தக் கருத்தைத் தாண்டிச்செல்ல நாம் மூன்று அடிப்படையானபிரச்சினைகளை எழுப்ப வேண்டும்: முஸ்லிம்களைஒரு அரசியல் சமூகமாகநிறுவுதல்; கூட்டு முஸ்லிம் நலன்களின்தொகுப்பு குறித்த கற்பனை; இந்தநலன்களைப் பாதுகாப்பதில் முஸ்லிம் தலைவர்களிடம் (அல்லதுமுறைசார்ந்த பொருளில் சட்டமன்றங்களிடம்) எதிர்பார்க்கப்படும்பங்கு.

சமூகம்
"சமகாலத்தின்சுருக்கமான வரலாறு: புதிய இந்தியாவில்முஸ்லிம்கள்" (A Brief History of the Present: Muslims in New India பெங்குயின்-ரேண்டம் ஹவுஸ், 2024) என்னும்எனது சமீபத்திய நூலில், "பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மை", (Substantive Muslimness) "முஸ்லிம்தன்மை குறித்த சொல்லாடல்" (Discourse of Muslimness) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு குறித்துஅலசியிருக்கிறேன். "பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மை" என்னும் சொல் உள்ளூரிலும் பிராந்தியமட்டத்திலும் முஸ்லிம்களின் அன்றாட அனுபவங்களைச் சித்தரிக்கமுயல்கிறது. சாதி, மொழி, பொருளாதாரநிலை, பிரிவு, பிராந்தியம் போன்றகாரணிகள் ஒரு குறிப்பிட்ட சமூக-அரசியல் சூழலில் முஸ்லிம்அடையாளத்தையும் அச்சமூகத்திற்கான கூட்டு சுய உணர்வுகளையும்தீர்மானிக்கும் காரணிகளாகின்றன

"முஸ்லிம்தன்மைகுறித்த சொல்லாடல்" என்பது முஸ்லிம் அடையாளத்தின்மற்றொரு வெளிப்பாடாகும். இது முஸ்லிம்தன்மையின் இயல்புக்குஇணையான முக்கியத்துவம் கொண்டது. இந்தியாவில் கூட்டுமுஸ்லிம் இருப்பு உணரப்படும், விளக்கப்படும், விவாதிக்கப்படும் வழிகளுடன் தொடர்புடைது. முஸ்லிம்களைமுற்றிலும் மத அடிப்படையில் "மத நம்பிக்கை கொண்ட சமூகமாக" நடத்துதல், சட்ட-அரசியலமைப்பு சார்ந்தசொல்லாடல்களில் அவர்களின் மதத் தனித்துவத்தைச் "சிறுபான்மையினர்" என்பதாகக் குறிப்பிடுதல், மக்கள் தொகை கணக்கெடுப்புசார்ந்த சொற்களில் அவர்களின் மக்கள்தொகையைஅளவிடுதல், இடைக்கால "இஸ்லாமிய ஆட்சியை" முஸ்லிம்வரலாறாகச் சித்தரித்தல், "உலகளாவிய ஜிஹாத்", தீவிரவாதம்ஆகியவை குறித்த ஊடக விவாதங்கள்ஆகியவை முஸ்லிம்களின் அடையாளம் குறித்த வலுவானஉரையாடலை உருவாக்குகின்றன. இஸ்லாமியர்கள் குறித்த இந்தப் பரந்துபட்டசித்தரிப்புகளுடன் முஸ்லிம் தனிநபர்கள் இணைக்கப்பட்டுப்பெரிய விளக்கங்கள் உருவாகின்றன. முஸ்லிம் அடையாளம் தொடர்பானஇந்த ஆயத்த வார்ப்புருக்கள் அடிமட்டத்தில்உள்ள முஸ்லிம் சுய உணர்வுகளையும்பாதிக்கின்றன.

பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மையையும் முஸ்லிம்தன்மைகுறித்த சொல்லாடல்களையும் இணைக்கும் முக்கியமான தொடர்புக் கண்ணி இந்திய முஸ்லிம் அடையாளத்தின் உண்மையானபிரதிநிதித்துவங்களைத் தீர்மானிக்கிறது. இந்த அர்த்தத்தில், முஸ்லிம்அடையாள உருவாக்கம் ஒரு ஊசல்போலச் செயல்படுகிறது. முஸ்லிம்தன்மை குறித்த சொல்லாடல்களும் இந்தியாவில்முஸ்லிம்கள் ஒரு சமூகமாக இருக்கிறார்கள்என்னும் கருத்தும் இந்த ஊசலாட்டத்தின்ஒரு முனையாகும். முஸ்லிம்தன்மையின்இயல்பை உருவாக்கும் கலாச்சார-உள்ளூர்த்தன்மை சார்ந்தகாரணிகள் இதன் மறுமுனையில் உள்ளன.

நலன்கள்
2024 மக்களவைத்தேர்தலுக்கு முன்பு சிஎஸ்டிஎஸ்-லோக்நீதிஎன்னும் நிறுவனம் கருத்துக்கணிப்பு (CSDS-Lokniti Pre-poll Survey 2024) நடத்தியது. தேசியத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு 19 இந்திய மாநிலங்களில் 10,019 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கணிப்பு இது. முஸ்லிம்களின்பொதுவான அபிலாஷைகளின் தன்மையை ஆராய்வதற்கு, "முஸ்லிம்பிரச்சினைகள்" என்ற கருத்தைப் புரிந்துகொள்வதற்கானபயனுள்ள பல பார்வைகளைவழங்குகிறது

வளர்ந்துவரும்வேலையின்மை, வளர்ச்சியின்மை, விலைவாசி உயர்வு, அதிகரித்துவரும்பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றைத் தங்கள் முக்கியமான கவலைகளாகமுஸ்லிம் சமூகங்கள் கூறுவதை இந்தக்கருத்துக்கணிப்பில் காண்கிறோம். தற்போதைய பொருளாதாரச் சூழலில்வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டதுஎன்று சுமார் 67 சதவீத முஸ்லிம்கள்கூறுகிறார்கள். 76 சதவீத முஸ்லிம்கள் பணவீக்கம்குறித்து அதிகமாகக் கவலை கொண்டுள்ளனர். இட ஒதுக்கீட்டிற்கு யார்தகுதியானவர்கள் என்பதை வரையறுக்கும் பட்டியல்சாதியினரின் பட்டியல்களில் தலித் முஸ்லிம்களைச் சேர்ப்பதுகுறித்த கருத்துக்கள் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பைக்குறிக்கின்றன. முஸ்லிம்கள், கிறிஸ்தவ மதங்களுக்குள் பாகுபாடுநிலவுவதற்கான சான்றுகள் இருந்தபோதிலும் அந்தமதங்களில் தீண்டாமை இல்லை என்றகருத்தின் அடிப்படையில் இவ்விரு மதத்தவர்களும் பட்டியல்சாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. முஸ்லிம் தலித்துகள் பட்டியல்சாதிப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையானமுஸ்லிம்கள் (76 சதவீதம்) வலியுறுத்துகின்றனர்

இந்தக் கண்டுபிடிப்புகள் அடையாளத்தை மையமாகக் கொண்ட "முஸ்லிம்பிரச்சினைகள்" என்ற வழக்கமான கருத்தாக்கத்திலிருந்துமிகவும் வேறுபட்டவை. மதச்சார்பின்மையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகங்கள் தங்கள்குடியுரிமை நிலையை மீட்டெடுப்பதற்கான முக்கியமானதூண்டுதலாக முஸ்லிம்தன்மையின் இயல்பு உள்ளது

எனினும், இந்துத்துவம் ஆதிக்கம் செலுத்தும் சூழல்முஸ்லிம்களின் கூட்டு உணர்வுகளைப் பாதிக்காதுஎன்று அர்த்தமல்ல. தற்போதைய சூழலில் முஸ்லிம்மத அடையாளமும் அரசியலமைப்புரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை சமூகமாக அதன் கூட்டுஇருப்பும் பிரச்சினைக்குரியதாகக் கருதப்படுவதான அச்சம் அதிகரித்துவருகிறது. 2024இல் முஸ்லிம்தலைமை குறித்து சயின்சஸ்-பிஓ-சிஎஸ்டிஎஸ்-லோக்நீதி கருத்துக்கணிப்பு நடத்தினோம் (சமகால இந்தியாவில் அரசியல் செயல்முறைகள் பற்றியமுஸ்லிம்களின் கருத்துக்களை அறிவதற்காக 2024இல் தேர்தலுக்கு முன்புமேற்கொள்ளப்பட்ட NES (National Election Studies) கருத்துக்கணிப்புடன்இணைந்து நடத்தப்பட்டது). இதில் பங்குபெற்ற முஸ்லிம்களில் கணிசமான பகுதியினர் (43 சதவீதம்) முஸ்லிம்கள் அரசு அதிகாரிகளால் நியாயமற்றமுறையில் நடத்தப்படுவதாக உணர்வதாகத் தெரியவந்துள்ளது. "முஸ்லிம் பாதுகாப்பு" என்பதும்முக்கியமான கவலைகளில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது. பதிலளித்த முஸ்லிம்களில் 54 சதவீதம் பேர் தாங்கள்மற்றவர்களைப் போலப் பாதுகாப்பாக இல்லைஎன்று கூறுகின்றனர் (தாங்கள் பாதுகாப்பாக இல்லைஎன்று கூறும் 11 சதவீதம் பேரும்இதில் அடக்கம்).  அரசு அதிகாரிகள் முஸ்லிம்களைநியாயமற்ற முறையில் நடத்துவது மிகவும்சாதாரணமாகிவிட்டதாகத் தெரிகிறது. அதிகாரிகளிடம் புகாரளிக்கக்கூட முடியாத அளவுக்கு இதுஇயல்பாகிவிட்டதாக முஸ்லிம்கள் பலர் நினைக்கிறார்கள்

முஸ்லிம்சமூகங்கள், இந்துத்துவத்தால் இயக்கப்படும் நிர்வாக விதிமுறைகளைப் புதியயதார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். இந்தகாரணத்திற்காகவே அவர்கள் அரசு நிறுவனங்களுடன்பயனுள்ள தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதில் முனைப்பாகஉள்ளனர். இந்தச் சுய பிரதிநிதித்துவம், சாத்தியமான மோதல்களையும் தகராறுகளையும் தவிர்ப்பதன் மூலம் பல்வேறு மட்டங்களில்அரசுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான தற்காப்பு உத்திஎன்று ஒருவர் வாதிடலாம்.  

இந்த இரண்டு ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளும்தங்களைப் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும்பார்வைகள், சமூக-பொருளாதாரக் காரணிகள்அல்லது பொருண்மை நிலையிலான முஸ்லிம்தன்மை என்று நாம் குறிப்பிடும்அம்சத்தின் மூலம் தீர்மானிக்கப்படுவதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில், முஸ்லிம்தன்மைஎது என்பதைத் தீர்மானிக்கும்சொல்லாடலாக இந்துத்துவத்தின் ஆதிக்கம் இருப்பதும் இதைத்தங்கள் இருத்தலியல் சார்ந்த பிரச்சினையாகக் கருதிமுஸ்லிம் சமூகங்கள் இதைத் தீவிரமாகஎடுத்துக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. எனவே, சிக்கலானதும் பல அடுக்குகள்கொண்டதும் மாறிவருவதுமான அமைப்பைக் கொண்ட இந்திய முஸ்லிம் அடையாளத்துடன்தொடர்புபடுத்திப் பார்த்தால் மட்டுமே இந்தியாவில் முஸ்லிம்களின் "கூட்டு நலன்களை அர்த்தமுள்ளவகையில் புரிந்துகொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.

தலைவர்கள்
முஸ்லிம்சமூகங்கள் அரசியலை, குறிப்பாகத் தேர்தல்அரசியலைச் சமூக நடவடிக்கைக்கு விருப்பமானகளமாகக் கருதுகிறார்கள். 51 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தாங்கள்அளிக்கும் வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும்என்று நம்புகிறார்கள் என்பதை எங்கள் தரவுகாட்டுகிறது. 2024இல் முஸ்லிம்களின் வாக்குகளில் 62 சதவீதம் பதிவானது. முஸ்லிம்களில் கணிசமானபெரும்பான்மையினர், தனிப்பட்ட குடிமக்கள் என்றமுறையிலும், அச்சுறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்ற முறையிலும் தங்கள்அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான சாத்தியமான வழியாக ஜனநாயகச் செயல்முறைகளைக்கருதுகின்றனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

அரசியல் என்னும் அமைப்பின் மீதுமுஸ்லிம்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை மூன்றுகேள்விகளை எழுப்புகிறது. முதலாவதாக, வாக்களிக்கும் ஆர்வத்திற்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக-மத அடையாளத்திற்கும்இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா? இரண்டாவதாக, ஆம் எனில், இந்தத்தொடர்பு மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சிஅமைப்புகளுக்கான தேர்தல் என அனைத்துவகையான தேர்தல்களுக்கும் பொருத்தமானதா? மூன்றாவதாக, முஸ்லிம்கள் முஸ்லிம் தலைவர்களை நம்புகிறார்களா? ஆம் எனில், அவர்களின்எதிர்பார்ப்புகள் என்ன?

தொழில்முறைமுஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் உயரடுக்குப் பிரிவினர், முஸ்லிம் ஆர்வலர்கள்/செல்வாக்கு செலுத்துபவர்கள் என வெவ்வேறுசூழல்களில் மிகவும் குறிப்பான சிலசெயல்பாடுகளை மேற்கொள்ளும் மூன்று வகையான அரசியல்பிரிவினரை "முஸ்லிம் தலைவர்கள்" என்றுகுறிப்பிடலாம். தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல்கட்சிகளுக்கும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் குறிப்பிட்ட முஸ்லிம்சமூகத்திற்கும் இடையே முக்கியமான இணைப்பாகச்செயல்படுகிறார்கள். உயரடுக்குகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், மத/கல்வி/சாதி/வர்க்கநிலையின் அடிப்படையில் தலைமை தாங்கும் மேம்பட்டநிலையை அடைந்தவர்கள். இந்தப் பிரிவினர் அக்கறையுள்ளமுஸ்லிம் சமூகத்தின் உள் அதிகாரக் கட்டமைப்பைப்பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். முஸ்லிம்செயல்பாட்டாளர்கள்/செல்வாக்கு செலுத்துபவர்கள் பொது விவாதங்களில் ஈடுபடுகிறார்கள்; பெரும்பாலும் ஊடகங்கள் முன்னெடுக்கும் விவாதஅரங்குகளில் முஸ்லிம் பிரதிநிதிகளாகத் தங்களுக்கெனஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ளஇவர்கள் முயல்கிறார்கள்.

50 சதவீதமுஸ்லிம் வாக்காளர்கள் ஒரு தலைவரின் மதப்பின்னணி தாங்கள் வாக்களிப்பதற்கான முக்கியக்காரணியாக இல்லை என்று வலியுறுத்துகிறார்கள்என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. இருப்பினும், 30 சதவீத முஸ்லிம்கள் இந்தக்கருத்தை ஏற்கவில்லை. தங்கள் சொந்த சமூகத்தைச்சேர்ந்த ஒரு தலைவரால் மட்டுமேதங்கள் நலன்களையும் கவலைகளையும் திறம்படப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றுஇவர்கள் கூறுகிறார்கள். முஸ்லிம் கருத்துக்களில் காணப்படும் இந்த வேறுபாடுகள், பல ஆண்டுகளாகவேமுஸ்லிம்கள் வாக்களிக்கும் முறைகள் மிகவும் பன்முகத்தன்மைகொண்டதாக இருப்பதைத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தொழில்முறை அரசியல் தலைவராக இருக்கும்ஒரு முஸ்லிமின்  மதஅடையாளம் என்பது சூழல் சார்ந்த அம்சம் என்பதேஇதன் பொருள். குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்டபிரதிநிதியை அணுகுவது முக்கியமான அம்சமாகஇராத மக்களவை அல்லது மாநிலச்சட்டமன்றத் தேர்தல்களில் இந்த நிலை உள்ளது.

முஸ்லிம்சமூகங்கள் எப்போதும் முஸ்லிம் தலைமைதொடர்பாக நலன் சார்ந்த பயன்பாட்டுஅணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. முஸ்லிம்கள் தற்போதுள்ள முஸ்லிம் தலைவர்கள் குறித்துநேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர் என்பதை எங்கள் கருத்துக்கணிப்புகாட்டுகிறது. பதிலளித்தவர்களில் 64 சதவீதம் பேர் முஸ்லிம்களிடம்நேர்மையான, அர்ப்பணிப்புள்ள தலைவர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். மறுபுறம், அதே அளவிலான முஸ்லிம்கள் (64 சதவீதம்) இந்தியாவில் மேலும்  தெளிவான முஸ்லிம் தலைவர்கள்தேவை என்று நினைக்கிறார்கள். இந்தஇரண்டு கூற்றுகளும் முரண்பாடாகத் தோன்றினாலும், அவை முஸ்லிம்களின் சிக்கலானஎதிர்வினையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன

தனிப்பட்டஒரு தலைவரின் நேர்மைஎன்பது அகவயமான பிரச்சினை. இந்துத்துவஆதிக்கம் நிலவும் சூழல் முஸ்லிம்தலைவர்களின் நிலையையும் அரசு அதிகாரிகளுடன் பேரம்பேசும் அவர்களுடைய ஆற்றலையும் பாதித்துள்ளது. மறுபுறம், பாஜக அல்லாதகட்சிகள் தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகளைத் திரட்டுவதில்அதிக ஆர்வம் காட்டுவதில்லை. முஸ்லிம்வாக்குகளின் மீது தங்களுக்கு ஏகபோகஉரிமை இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்; எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல்சேவைகள் அவர்களுக்கு அவசியமில்லை. இந்தப் பின்னணியில், முஸ்லிம்தலைவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் முஸ்லிம்சமூகத்துடன் தங்களது உயிரோட்டமுள்ள தொடர்புகளைவலுப்படுத்திக்கொள்வது இயல்பானது. முஸ்லிம் அரசியல்வாதிகள், செல்வாக்குசெலுத்துபவர்கள் பற்றி ஓரளவு நேர்மறையானகருத்து முஸ்லிம்களிடத்தில் இருப்பதைத் தீர்மானிப்பதில் இந்தச் செயல்முறைக்கு நிச்சயமாகஒரு பங்கு உள்ளது.

இருப்பினும், தற்போதுள்ள முஸ்லிம் தலைமையின் வடிவங்கள்குறித்த பதற்றம் முஸ்லிம்களிடத்தில் அதிகரித்துவருவதையும்கவனிக்க முடிகிறது. முஸ்லிம்களுக்குச் சிறந்த, தெளிவான, நேர்மையானதலைவர்கள் தேவை என்று கருத்துக்கணிப்பில்கலந்துகொண்ட முஸ்லிம்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். உறுதியான முஸ்லிம் தலைவர்களின்பற்றாக்குறை தங்களுடைய பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கிறதுஎன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாதிடுகிறார்கள். கருத்துக்கணிப்பின் இந்தக் கண்டுபிடிப்புகள் முஸ்லிம்சமூகங்கள் யதார்த்தமான அரசியலைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன. அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்ற கூட்டு அடையாளத்தைவிட்டுக்கொடுக்காமல் மதச்சார்பற்ற வாக்காளர்களாகத் தங்களை வரையறுத்துக்கொள்கிறார்கள்.

பிரதிநிதித்துவம்
முஸ்லிம் அரசியல்அடையாளத்தின் இந்தப் பன்முகம் கொண்ட உருவாக்கம்பிரதிநிதித்துவத்தின் மூன்று தெளிவான அர்த்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முதலாவதாக, முறை சார்ந்த சட்டமன்றப் பொருளில் முற்றிலும் மதச்சார்பற்றசொற்களில் பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படுகிறது. ஒரு தலைவரின் மதம் தங்களின் முக்கியக்கவலையாக இல்லை என்று கருத்துக்கணிப்பில் பதிலளித்த முஸ்லிம்கள்வலியுறுத்துவதாகத் தெரிகிறது. அதாவது, பிரதிநிதித்துவம் என்னும்காரணத்திற்காகத் தொழில்முறை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை அளிக்க முஸ்லிம்களுக்கு விருப்பம்இல்லை.

சமூக-பொருளாதார அளவில் தங்களதுபின்தங்கிய தன்மை, தாங்கள் ஓரங்கட்டப்படுதல் ஆகியவை குறித்தமுஸ்லிம் கருத்துக்கள் மிகவும் மாறுபட்ட எதிர்பார்ப்பை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றன. இந்த விஷயத்தில் பிரதிநிதித்துவம் என்பது, "‘பஸ்மாந்தாமுஸ்லிம்களை (Pasmanda Muslims) நிறுவன ரீதியாக உள்ளடக்குவதற்கான" வடிவமாகக் காணப்படுகிறது. (வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சாதியச் சமூகங்களைக்குறிக்க பாஸ்மந்தா என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது) வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டமுஸ்லிம் சாதியச் சமூகங்களுக்கு இடஒதுக்கீடுதருவதற்காகப் பட்டியலினத்தவர்களின் பட்டியலில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என்றகோரிக்கை, இந்தக் கண்ணோட்டத்தின் தெளிவான வெளிப்பாடாகும்

இந்தியாவில்பாதுகாப்பான சூழலுக்கான முஸ்லிம்களின் தேடலும், தேசபக்தி தொடர்பான அவர்களுடைய மிகையான சுய உரிமைகோரலும், ஊடகங்கள் முன்னெடுக்கும் வலுவான முஸ்லிம் எதிர்ப்புப்பிரச்சாரம் பொது இடங்களில் தங்கள்இருப்பை அபாயகரமானதாகச் சித்தரிப்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. இந்தியப் பண்பாட்டு, அரசியல்வாழ்வில் தங்களுக்கான இடத்தை மீட்டெடுக்கக் "கூட்டு இருப்பு" வடிவத்தில்பிரதிநிதித்துவத்தை முஸ்லிம்கள் நாடுகிறார்கள். இந்தச் செயல்திட்டத்தில் முஸ்லிம்தலைவர்கள் முஸ்லிம்களின் "பிரதிநிதிகளாகக்" கருதப்படுவதில்லை. மாறாக, முஸ்லிம்கள் பல்வேறு நிலைகளில் அரசியல் அமைப்பில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுசெய்யக்கூடியவர்களாக அவர்கள் செயல்பட வேண்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஆசிரியர் குறிப்பு: இந்தச் சிறிய கட்டுரை ஹென்றி லூஸ் அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்ட "இந்தியாவில் முஸ்லிம்கள் (Muslims in India - MI))" திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட்து. இந்த ஆராய்ச்சியில் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் அளித்த அவரது அறிவுசார் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹிலால் அகமது

Author

ஹிலால் அகமது, புதுதில்லியில் உள்ள வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தில் (CSDS) இணைப் பேராசிரியராக உள்ளார். CASIவிற்கு 2024இல் வருகைதரு கல்வியாளராக வருகைபுரிந்தார். 

(Tamil Translation by Aravindan D.I.) 
தமிழ் மொழியாக்கம்: டி.ஐ. அரவிந்தன்