குறைக்கடத்தித் (semi-conductor) துறையில் இந்தியா பெரும் திட்டங்களைக்கொண்டுள்ளது. நடுத்தர அளவில் மின்கடத்தும் திறன்கொண்ட பொருள்கள் குறைக்கடத்திகள் எனப்படுகின்றன. தைவான், தென் கொரியா, அமெரிக்கா ஆகியநாடுகள் ஆதிக்கம் செலுத்தும் சிப்உற்பத்தித் துறையில் ஒப்பீட்டளவில் புதிதாகநுழைந்த நாடு இந்தியா. கடந்தசில ஆண்டுகளாக, இந்தத்துறையில் முன்பு எப்போதும் இல்லாதஅளவில் இந்தியா முதலீடு செய்துள்ளது. "உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் இருக்க வேண்டும்என்பதே எங்கள் கனவு" என்றுபிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2024இல் ஒரு நிகழ்வில் கூறினார். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா குறைக்கடத்தித் துறையில்தனது செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ. 76,000 கோடி முதலீடு செய்துள்ளது. இந்தியாவில்சிப்புகள் தயாரிக்கத் திட்டமிடும் நிறுவனங்களுக்குப் பெருமளவில் மானியங்களை வழங்குகிறது. 2023ஆம் ஆண்டில் 29 பில்லியன்டாலராக இருந்த இந்தத் தொழில்துறையின்மதிப்பு 2030க்குள் 109 பில்லியன் டாலராக - கிட்டத்தட்ட நான்கு மடங்கு - உயரும்என்று நம்புகிறது.
பெரிய அளவிலான இத்தகைய விரிவாக்கம்பல கேள்விகளை எழுப்புகிறது. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அரசாங்கத்தின் முதலீடுவேலைவாய்ப்பை உருவாக்குமா என்பது அதில் ஒன்று. ஆனால் இந்தத் துறையில் இந்தியாமேற்கொள்ளும் பெரும் முயற்சியைப் பற்றியபரபரப்பான செய்திகளுக்கு மத்தியில், இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்தத்திட்டம் என்ன பலனை அளிக்கும்என்னும் கேள்வி அதிகம் எழுப்பப்படவில்லை.
உற்பத்தித்தொழில்களில், குறிப்பாகத் தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில், தொழிலாளர் உரிமைகளுக்கான கட்டமைப்புஇந்தியாவில் ஏற்கெனவே மோசமாக உள்ளது. சிப் உற்பத்தியில் உள்ள தீவிரமான இரசாயனச்செயல்முறைகள் கடுமையான உடல்நலக் கேடுகளைஏற்படுத்தும் எனப் பிற நாடுகளில்நடைபெற்றுள்ள ஆராய்ச்சிகளிலிருந்தும் தொழிலாளர்களின் அனுபவங்களிலிருந்தும் கிடைக்கும் சான்றுகள் காட்டுகின்றன. இரசாயனங்களுக்கும்நச்சுப் பொருட்களுக்கும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை வரையறுக்கும் விதிமுறைகளைஅகற்றும் நோக்கத்துடன், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கானதொழிலாளர் சட்டங்களில் மாற்றம் செய்ய அரசுதிட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய இடைவெளியைத் தவிர்ப்பதற்கான கண்காணிப்பு அல்லது ஆய்வு உள்கட்டமைப்பில்எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் திட்டமும் இல்லை. வலுவானவழிமுறைகளை நிறுவாமல், தொழில்சார் ஆரோக்கியம், பாதுகாப்பு குறித்த தற்போதைய சட்டங்களைமேம்படுத்தாமல், இந்தியாவில் இந்தத் தொழில்துறையை விரைவாகவிரிவாக்கம் செய்வது அதன் தொழிலாளர்களுக்குஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
நஞ்சின் வரலாறு
குறைக்கடத்திகளின்உற்பத்தி தீவிரமான வேதியியல் அம்சம்கொண்டது. ஒருசிப்பில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கையைப்பொறுத்து நூறு முறை வரையிலும் மீண்டும்மீண்டும் செய்யப்படும் சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியது. சிப் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பற்றிய தகவலையும்தொழில்துறை ரகசியமாகவே வைத்திருக்கிறது. இந்தத் தொழில்துறையின் தொடக்கக்கட்டமான 1960களிலிருந்து 1990கள்வரை அமெரிக்கா சிப்உற்பத்தியில் முன்னணியில் இருந்தது. இந்தத் துறையில்அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. அந்தஆண்டுகளில் இந்தத் தொழில்துறையில் ஈடுபட்டதொழிலாளர்கள் உற்பத்திச் செயல்பாட்டின்போது, புற்றுநோய், இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள், கருச்சிதைவுகள்ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களுடன் புழங்க வேண்டியிருந்தது. 1980களின்முற்பகுதியில் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அரசின்தொழில்துறை உறவுகள் துறை வழங்கியதரவுகளின்படி, 1978ஆம் ஆண்டில் மற்றதொழில்களைவிட இந்தத் தொழிலில் உள்ளதொழிலாளர்களிடையே தொழில்சார் நோய்களின் விகிதம் ஒப்பீட்டளவில்நான்கு மடங்கு அதிகமாக இருந்ததுஎன்பதைக் காட்டியது.
அமெரிக்காவில்குறைக்கடத்திகளின் உற்பத்தியுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் பற்றியகூடுதல் தகவல்கள் 1990களில் வெளிவந்தன. சிப்தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எத்திலீன் கிளைகோல் ஈதர்கள் (EGEs) போன்ற சில இரசாயனங்களோடு புழங்கும்தொழிலாளர்களுக்கு ஏற்படும் கருச்சிதைவுகள் சராசரிகருச்சிதைவு விகிதங்களைவிட அதிகமாக இருப்பது ஒருஆய்வில் தெரியவந்தது. அதன் பிறகு 1992ஆம்ஆண்டில், இத்தகைய இரசாயனங்களைப் படிப்படியாகக்குறைப்பதாக ஐபிஎம் நிறுவனம் அறிவித்தது. அதே ஆண்டு, குறைக்கடத்தித்தொழில்துறைக் கூட்டமைப்பு (Semi-Conductor Industry Association) ஏற்பாடுசெய்தஒரு ஆய்வு, இந்தத்தொழிலில் பணிபுரியும் பெண்களிடையே தானாகவே நிகழும் கருக்கலைப்புகள்அதிகரித்தையும் ஃபேப்ரிகேஷன் பகுதிகளில் வேலை செய்பவர்களிடையே இத்தகையகருக்கலைப்புகள் மேலும் அதிகமாக நிகழ்ந்ததையும்காட்டியது.
இந்தக் காலகட்டத்தில், புற்றுநோய்கள், நாள்பட்ட நோய்கள், இனப்பெருக்கம்தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளான தொழிலாளர்கள் அமெரிக்காவில்உள்ள பல குறைக்கடத்திஉற்பத்தியாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே பல சமரசஉடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1969முதல் 2001வரை ஐபிஎம்மின் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தகிட்டத்தட்ட 32,000 பேரை உள்ளடக்கிய ஆய்வு 2006ஆம் ஆண்டு நடைபெற்றது. இதரமக்களைக் காட்டிலும் இவர்களுக்குப் புற்றுநோய்கள் (மூளை, சிறுநீரகம், தோள்ஆகியவற்றுடன் தொடர்புடைய புற்றுநோய்கள் உட்பட) அதிகமாக ஏற்பட்டதைஇந்த ஆய்வு காட்டியது. ஐபிஎம் நிறுவனத்திற்கு எதிராகஅதன் இரண்டு தொழிலாளர்கள் வழக்குத்தொடர்ந்ததையடுத்து நிபுணர்களின் அலசலுக்காக இந்தத் தரவுகளை நிறுவனம்வெளியிட்டபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.
சிப் தயாரிக்கும் தொழில் தன் உற்பத்திநடவடிக்கைகளை ஆசியாவிற்கு இடமாற்றம் செய்தபோது அங்கும்தொழிலாளர்களுக்கு இதேபோன்ற உடல்நல அபாயங்கள்காணப்பட்டன. அமெரிக்காவில் சிப் தயாரிப்பிலிருந்து "ஒவ்வொரு கட்டமாகவெளியேற்றப்பட்ட" அதே இரசாயனங்களைத் தென்கொரியாவில்உற்பத்தியாளர்கள் பயன்படுத்திவந்ததை அது குறித்த ஆய்வுகாட்டியது. எந்த அளவுக்கு நச்சுத்தன்மைகொண்டவை என்பது பற்றி அவ்வளவாகவிவரம் தெரியாத, முழுமையாக மதிப்பிடப்படாதமற்ற இரசாயனங்களையும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திவந்ததும் தெரியவந்தது. சிப் தயாரிக்கும் பிரிவுகளில்பணிபுரிபவர்களுக்கு லுகேமியா உள்ளிட்ட புற்றுநோய்களும்கட்டிகளும் ஏற்பட்டன. கருச்சிதைவுகளும் அதிகமாயின. 2007ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் குடும்பங்களும்தொழிலாளர் துறையில் செயலாற்றும் பொதுநலஆர்வலர்களும் தொடங்கிய நீண்டகால சட்டப்போராட்டத்தையும் பொதுப் பிரச்சாரத்தையும் தொடர்ந்து, நாட்டின் முன்னணி குறைக்கடத்தி உற்பத்தியாளரான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், 2018இல் தனது "குறைக்கடத்தி மற்றும் எல்சிடி தொழிற்சாலைகளில் உடல்நலம் தொடர்பானஅபாயங்களைச் சரியாக நிர்வகிக்கத் தவறியதற்காக"த் தொழிலாளர்களிடம்மன்னிப்புக் கேட்டுகொண்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 133,000 டாலர் இழப்பீடு தரஒப்புக்கொண்டது. சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும்பொருட்களுக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகளுக்கும் இடையேஉள்ள தொடர்பை நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.
வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்
தொற்றுநோயியல்ஆய்வுகளில் சில விதமான இரசாயனங்களுக்கும்மனிதர்கள்மீதான அவற்றின் விளைவுகளுக்குமிடையே தெளிவானதொடர்புகளை நிறுவுவது பொதுவாகக் கடினமானது. தொழில்சார் நோய்களுக்கு ஆளான தொழிலாளர்களின் வழக்குகளின்விவரங்கள் நம்மிடம் இருகின்றன. நிறுவனங்கள் தீங்கு விளைவித்ததற்கான குற்றத்தைஏற்காமல் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்குகள்பெரும்பாலும் பெரும்பாலும் தீர்க்கப்படுகின்றன. இவை இந்தியாபோன்ற நாடுகளுக்குமுக்கியமான படிப்பினைகளை முன்வைக்கின்றன. குறைக்கடத்தித் தொழிலில் விரைவாக வளர்ச்சிகாணும்பாதையை இந்நாடுகள் தீவிரமாகப் பின்பற்றுகின்றன. மற்ற நாடுகளின் அனுபவம்இந்தத் துறையில் தொழில்சார் ஆரோக்கியம்தொடர்பான இரண்டு முக்கியமான பிரச்சினைகளைச்சுட்டிக்காட்டுகிறது: சிப் தயாரிப்பில் இரசாயனங்களின்பயன்பாடு பற்றிய தகவல் இல்லாமை, உற்பத்தியில் பொருட்கள் அல்லது செயல்முறைகள்விஷயத்தில் வெளிப்படைத்தன்மை அல்லது பதில் கூறும் பொறுப்பு இன்மை.
தொழிலாளிகள்புழங்கும் இரசாயனங்கள் அல்லது அவற்றின் சாத்தியமானஅபாயங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கத்தவறிய வரலாறு இந்தத் தொழில்துறைக்குஉள்ளது. புதிய இரசாயனங்கள் மனிதஆரோக்கியத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்துப் போதியமதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் உற்பத்தியில் அவை அறிமுகப்படுத்தப்படுவதற்குத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்வழிவகுத்தன. உற்பத்தி மையங்களில் தொழிலாளர்கள்தங்கள் உடலை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிவார்கள். ஆனால்இந்த உடைகள் தொழிலாளர்களை நச்சுஇரசாயனங்களிலிருந்து காப்பதற்காக அல்ல; சிப்புகள்/சிலிக்கான்செதில்கள் மாசுபடாமல் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் ரசாயனங்களின்பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன அல்லது மோசமான உடல்நலப்பாதிப்புகளுக்காகத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கின்றன. இவை தொழிலாளர்களின்கூட்டு முயற்சிகளின் விளைவுகள். தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) என்பது அமெரிக்காவில் தொழில்சார் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கான ஒழுங்குமுறை நிறுவனம். பல இரசாயனங்களின்அனுமதிக்கப்பட்ட வரம்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படாமல்இருக்கலாம்; அல்லது உற்பத்தி செயல்முறையின்விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப இவை மாறாமல்இருக்கலாம் என்பதை இந்த அமைப்புஒப்புக்கொள்கிறது. தொழில்சார் சுகாதாரச் சட்டமான தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1970இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அனுமதிக்கதத்தக்க வரம்புகள் குறிப்பிடப்பட்டன.
இந்தியாவுக்கான பாடங்கள்
தொழில்சார்ஆரோக்கியம், தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றைஒழுங்குபடுத்துவதற்கு இந்தியாவில் நிலவும் வழிமுறைகளின்நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில்குறைக்கடத்தி உற்பத்தியில் உள்ள உடல்நல அபாயங்களின்வரலாறு இந்தியாவிற்குச் சவாலாகவே அமையும். தொழில்சார்உடல்நலம், பாதுகாப்பு ஆகிய்வை குறித்து அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பு, "அபாயகரமான" தொழில்களின் அட்டவணையைக் கொண்டுள்ளது. அந்தப் பட்டியலில் “குறைக்கடத்திஉற்பத்தி”யும் அடங்கும். இதுசுகாதார அபாயங்களை வெளியிடுதல் (s. 84), சுகாதாரப்பதிவேடுகளைப் பராமரித்தல், தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனையைக் கட்டாயமாக வழங்குதல் (s. 85) ஆகியவற்றைக்கோரும் விதிகளின் வரம்பிற்குள் இந்தத்தொழிலைக் கொண்டுவருகிறது.
"அபாயகரமான" பட்டியலில் இந்தத் தொழில்துறையைச் சேர்த்ததுவரவேற்கத்தக்கது என்றாலும் - போபால் வாயுக் கசிவுப்பேரழிவுக்குப் பிறகு, 1987முதல் இந்தப் பட்டியல் புதுப்பிக்கப்படவில்லை – இரசாயனங்கள், நச்சுப் பொருட்களின் "அனுமதிக்கக்கூடியவரம்புகள்" இந்தக் குறியீட்டில் விடுபட்டுள்ளதுஅபாயகரமானது. பழைய தொழிற்சாலைகள் சட்டம், 1948இன் இரண்டாவது அட்டவணையில் இதுஇருந்தது. குறைக்கடத்தி உற்பத்தித் துறையில் நச்சு இரசாயனங்கள் பயன்படுத்துவதைப்பற்றி நாம் இப்போது அறியவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப இந்தப்பட்டியல் இல்லை என்பது ஒருபுறமிருக்க, எந்தவொரு இரசாயனப் பொருளுக்கும் "அனுமதிக்கக்கூடியவரம்புகள்" குறித்த எந்தக் குறிப்பையும்அரசின் அறிவிப்பு முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறது. "மாநில அரசு இதைப் பரிந்துரைக்கும்" என்று அது சொல்லிவிட்டது. விவரக்குறிப்புகள் எவ்வாறு புதுப்பிக்கப்படலாம், அல்லது, இதற்கு நேர்மாறாக, தொழிற்சாலைகள் சட்டம், 1948இன் விதியின் கீழ்மத்திய அரசு, சிறப்பு நிறுவனங்கள்அல்லது நிபுணர்கள் அளிக்கும் குறிப்பிட்ட ஆதாரத்தின்அடிப்படையில் அடிப்படையில் இரண்டாவது அட்டவணையில் அனுமதிக்கப்பட்டவரம்புகளில் எந்த விதத்தில் மாற்றங்களைச்செய்யலாம் என்பதற்கான ஏற்பாடு ஏதும் இல்லை.
ஒழுங்குமுறைக்கானசெயல்முறைகளைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் தொழிலாளர்கள் புழங்கும் இரசாயனங்களின் அளவுக்கான வரம்புகளைத் தீர்மானிக்கும் OSHA போன்ற அமைப்பு இந்தியாவில் இல்லை. தொழில்சார் ஆரோக்கியத்தில் நச்சுத்தன்மைக்கான தரநிலைகளைப் பராமரிப்பதற்கோ அல்லது தொற்றுநோய் சார்ந்தஆய்வுகளை மேற்கொள்வதற்கோ எந்த அமைப்பிற்கும் அல்லதுஒழுங்குமுறை நிறுவனத்திற்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. தொழிற்சாலைஆலோசனை சேவை மற்றும் தொழிலாளர்நிறுவனங்களுக்கான பொது இயக்குநரகம் (DGFASLI) தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான தொழில்நுட்பஅமைப்பாகச் செயல்படுகிறது. இது எப்போதாவது ஒருமுறைமட்டுமே தொழில்சார் ஆரோக்கியம் பற்றிய ஆய்வுகளை நடத்துகிறது. உள்கட்டமைப்பும் (ஆய்வகங்கள், உபகரணங்கள் போன்றவை), ஆய்வாளர்களாகப் பணியமர்த்தப்பட்டபயிற்சி பெற்ற வல்லுநர்களும் போதியஅளவு இல்லாத நிலை தொழில்சார்ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவருகிறது.
இந்தியாவின்பெரிய மாநிலங்களில், அனைத்துத் தொழிலாளர் சட்டங்களும்தொடர்ந்து பலவீனமடைந்துவருவதை ஆய்வுகள் காட்டுகின்றன. தொழில்சார்சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தொழிலாளர்சட்டங்களில் ஏற்படுத்தவிருக்கும் மாற்றம் தொடர்பாக அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு "இணைய அடிப்படையிலான ஆய்வுகளை"ச் சார்ந்திருக்கும்ஆய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது,இது தொடர்பான தகவல்களை மின்னணு வடிவில் கோரலாம். இந்தத் திட்டத்தின் கீழ் ஆய்வுக்கான தொழிற்சாலைகள்அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேர்ந்தெடுக்கப்படும். ஆய்வாளர்கள், தவறு செய்யும் தொழிற்சாலைகளைஅடையாளம் கண்டு அந்தத் தொழிற்சாலைகளுக்குள்நுழைந்து பொருட்கள் அல்லது செயல்முறைகளைநேரடியாக ஆய்வுசெய்ய முடியாது. இந்தியாவின் பலமாநிலங்கள் ஏற்கெனவே தாமாகவே சான்றிதழ்வழங்கிக்கொள்ளும் செயல்முறைகளுக்கு நகர்ந்துவிட்டன; அல்லது நேரடியான பரிசோதனையிலிருந்துதொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளன. முன்னதாக, தொழிலாளர் பிரதிநிதித்துவத்துடன் ஒரு பாதுகாப்புக் குழுவைஅமைப்பதற்கான சட்டப்பூர்வத் தேவை (s. 41 G, தொழிற்சாலைகள் சட்டம், 1948) இருந்தது. தற்போது வெளியாகியுள்ளஅறிவிப்பு இது கட்டாயமில்லை என்று ஆக்கிவிட்டது. தொழிற்சாலையின்தன்மையைப் பொறுத்து மத்திய அல்லதுமாநில அரசு இதைத் தீர்மானித்துக்கொள்ளலாம்என்று கூறியிருக்கிறது (s. 22).
இந்தியாவில்தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் செயல்முறை போதிய அளவுஇல்லாத நிலை இருக்கிறது. புதியசட்டங்களின் மூலம் இது மேலும்பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்தான் குறைக்கடத்தித்தொழில்துறையின் வளர்ச்சி நிகழவிருக்கிறது. பணியாளர்களைஅபாயத்திற்கு உட்படுத்தாத “நல்ல வேலை” கிடைப்பதற்கானமுயற்சிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்என்பதைப் புரிந்துகொள்ள, பல்வேறு இடங்களுக்கு மாறிவரும்சிப் உற்பத்தித் தொழிலில் உள்ள பணியாளர்களின்அனுபவங்கள் உதவுகின்றன. இதற்குத் தொழில்நுட்ப நிபுணத்துவமும்தொழிற்சாலையில் உள்ள நிலவரத்தைப் பதிவுசெய்வதற்கானவலுவான ஏற்பாடுகளும் தேவை. இவற்றுடன், தொழிலாளர்களைமையமாகக் கொண்ட பொதுவான கட்டமைப்பும்தேவை. தங்கள் ஆரோக்கியம் தொடர்பாகமுடிவெடுக்கும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கி, தங்களின் கவலைகளைத்தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தொழிலாளர்களுக்கு உதவும்கட்டமைப்பாக அது இருக்க வேண்டும்.
"குறைக்கடத்திஉற்பத்தி"யை "அபாயகரமான" தொழில்என்று வகைப்படுத்தும் இந்தியாவின் முடிவு, அதிலுள்ள ஆபத்துக்களை மறைமுகமாகஒப்புக்கொண்டாலும், அதன் தொழில்சார் சுகாதாரம்,உற்பத்திக்கான பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை காலாவதியானவை; தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், செயல்முறைகளுக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான தகவல்களைப் பதிவிடும் வழிமுறைகள் பயனற்றவை. தொழில்துறையில் இரசாயனங்களைப் பயன்படுத்துவது பற்றி நமக்கு மிகக்குறைவாகவே தெரியும் என்பதால், நம்பகமானதரவுகள் இல்லாத நிலையில், தொழிலாளர்கள்கையாளும் இரசாயனங்கள் எந்த அளவுக்கு இருக்கலாம்என்பதற்கான வரம்புகளை விதிப்பதற்கான பரிந்துரைகளைச்செய்வது கடினமாக இருக்கும். குறைந்தபட்சம், மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து முன்பேசோதிக்கப்படாத இரசாயனங்களை உற்பத்தியில் பயன்படுத்தக் குறைக்கடத்தி தொழிலை அனுமதிக்கக் கூடாது. தொழில்சார் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவை குறித்த ILO உடன்படிக்கை எண். 155இல் கூறியுள்ளபடி,தங்கள் உடல்நலத்திற்கு "உடனடியாகவும் தீவிரமாகவும் ஆபத்தை" ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையிலிருந்து தங்களை அப்புறப்படுத்திக்கொள்ளத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவேண்டும் . தொழில்நுட்பம், உற்பத்திக்கான இடுபொருட்கள், செயல்முறைகள் ஆகியவற்றில் வேகமாக ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்குஏற்ப, தொழில்துறைக்கான தொழில்சார் சுகாதார, பாதுகாப்பு விதிமுறைகளும்மாற்றப்பட வேண்டும். இத்தகைய வழிமுறைகள்தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இருப்பதுடன்தொழிலாளர்களுக்கான கவலைகள் உருவாகும் சயமத்தில்அவற்றுக்குப் பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தொழில்சார்சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கவேண்டும். அப்போதுதான் நிபுணர்களும் நிறுவனங்களும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்துக்கு ஏற்ப விதிமுறைகளை அமைக்கமுடியும்.