ஊடகங்களைஒழுங்குபடுத்தும் முயற்சிகளின் மையத்தில், சமூக நடத்தையைப் பாதிக்கும்ஊடக வடிவங்களின் சக்திகுறித்த கவலைகள் இருந்துவருகின்றன. எடுத்துக்காட்டாக, சமகால இந்தியாவில், "இணையத்தில் நிர்வகிக்கப்படும் உள்ளடக்கத் தளங்”களுக்கு (Online Curated Content Platforms), அதாவதுஇப்போது நம்மில் பெரும்பாலோர் ஓடிடி (ஓவர்-தி-டாப்) ஸ்ட்ரீமிங் தளங்கள் என்று அறிந்திருக்கும்தளங்களுக்குத் தகவல் மற்றும் ஒளிபரப்புஅமைச்சகம் அண்மையில் அனுப்பியிருக்கும் ஆலோசனையில்இதைக் காணலாம். ஸ்ட்ரீமிங் தளங்களைத்தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும்டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 உடன் இணைக்க வேண்டியதன்அவசியத்தை இந்த ஆலோசனை கோடிட்டுக்காட்டுகிறது. ஏனெனில் இந்தத் தளங்களால்நிர்வகிக்கப்படும் உள்ளடக்கத்தில் இருக்கும் ஆபாசம் குறித்துஅமைச்சகத்திற்குப் புகார்கள் வருகின்றன.
காட்சி ஊடகங்களின் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான கோரிக்கை புதியதல்ல. 1990களில்தாராளமயமாக்கல் தொடங்கியபோதும் திரைப்படங்களின் திருட்டுப் பதிப்புகள், திரைப்பட இறக்குமதி, வீடியோதொழில்நுட்பம், கேபிள் தொலைக்காட்சி, வெளிநாட்டுப்படங்கள் முதலான கவலைகள் எழுந்தன. உண்மையில், ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றமும் - எடுத்துக்காட்டாக, வீடியோ, கேபிள் தொலைக்காட்சி, ஸ்ட்ரீமிங் தளங்களின் வருகை - அரசுநிர்வகிக்கும் ஊடக ஒழுங்குமுறை அமைப்பின்சமநிலையைக் குலைத்தது. தாராளமயமாக்கலுக்குச் சற்று முன்னதாக இந்தியாதனது பொருளாதாரத்தை அதிகாரபூர்வமாகத் திறந்தபோது, புலம்பெயர்ந்தோர் வழியாக நுகர்வோர் பொருளாதாரம்உருவானது. இது 1980களிலும்கூடக் காணப்பட்டது. இதனுடைய பல்வேறு அம்சங்களில் காணொலிகளைப்பதிவுசெய்யும் கருவி (Video Cassette Recorder - விசிஆர்), காணொலிகளைக் காண்பதற்கானவீடியோ கேசட்டுகள் (Video Home System Tapes - விஹெச்எஸ்) ஆகியவை பெற்றுவந்த பெரும்வரவேற்பும் அடங்கும். முதலில் இறக்குமதிமூலம் இவை வந்தன. ஆனால்தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் வளைகுடாவிலிருந்தும் வந்த கடத்தப்பட்ட படங்களின்வருகையைத் தடுக்க விரைவிலேயே உள்ளூரில்வீடியோ கேசட்டுகள் கிடைக்கத் தொடங்கின. இந்தமாற்றங்களின் தாக்கங்கள் வெறும் பொருளாதாரம் அல்லதுதொழில்நுட்பம் சார்ந்தவை அல்ல; 1980களிலும் 1990களிலும் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக, அரசாங்கத்தின் ஊடகக் கொள்கையில் ஒருமுக்கியத் தூணாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRI) என்னும் அம்சம் உருப்பெற்றது.
வீடியோ தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் வெளிநாடுவாழ்இந்தியர்களின்முக்கியத்துவம்அதிகரித்த்தும் சற்றே மாறுபட்ட திசைகளைக்குறிப்பதாகத் தோன்றினாலும், இவை இரண்டுமே இந்தியாவில்திரைப்படத் தயாரிப்பு, விநியோக வழிமுறைகள், காமப்பட வீடியோக்கள், மிதமானஆபாசப் படங்கள் ஆகியவற்றின் பொருளாதாரத்தில்எதிர்பாராத பக்க விளைவுகளை ஏற்படுத்தின. வீடியோக்களின் திருட்டுப் பதிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர்களின்நிதியை ஈர்ப்பதற்கான ஒரு திட்டம் பற்றியகவலைகள், ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பாலியல் உணர்வுகளைச் சுரண்டும்படங்கள் வருவதற்கு வழிவகுத்தன. இதுநாளடைவில் இன்று நாம் அறிந்தமலையாள "மிதமான ஆபாச" வகையைஉருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது.
வீடியோ தொழில்நுட்பமும் வீடுகளில் திரைப்படம் பார்த்தலும்
1990களில்மத்திய அரசு 900,000க்கும் மேற்பட்ட வீடியோகேசட் ரெக்கார்டர்களையும் (விசிஆர்) வீடியோ கேசட்பிளேயர்களையும் (விசிபி) தயாரிப்பதற்கான உரிமங்களைவழங்கிய பிறகு, வீடியோகான், பிபிஎல், கல்யாணி ஷார்ப் போன்ற உற்பத்திநிறுவனங்கள் உள்நாட்டு நுகர்வுக்காக விசிஆர்களையும்விசிபிகளையும் தயாரிக்கத் தொடங்கின. உள்நாட்டு விசிஆர்உற்பத்தியாளர்களின் வளர்ச்சி, விஎச்எஸ் டேப்கள்மீதான மக்களின் ஆர்வத்தையும் ஆதரித்தது. இதர சில காரணங்களுடன்இந்த ஆர்வமும் சேர்ந்துகொண்டு, 1990களில்வளைகுடாவில் உள்ள இந்தியர்களிடையே பிரபலமாகஇருந்த பே டிவியுடன்சேர்ந்து, வீடியோவின் மூலம் நேரடியாகக் காமதிரில்லர் படங்களை வீடுகளில் பார்க்கும்வழக்கம் பெருகுவதற்கு வழிவகுத்தது. இந்தியாவில் ஆபாசப் படங்கள் பேச்சுவழக்கில் "ப்ளூ பிலிம்" (நீலப் படங்கள்) என்றுஅழைக்கப்படுகின்றன. இவை திருட்டு விஹெச்எஸ்டேப்களாகவும் வணிகக் கப்பல்களில் மாலுமிகளால்விட்டுச் செல்லப்பட்ட பொருட்களாகவும் வளைகுடா வழியாக இந்தியாவிற்குள்நுழைந்து, பின்னர்உள்நாட்டுக் கறுப்புச் சந்தைகளில் மறுவிற்பனைசெய்யப்பட்டன. பிறர் அறியாமல் பார்ப்பதற்கானவாய்ப்பு இருப்பதால் பார்வையாளர்கள் தங்கள் படுக்கையறையில் இருந்தபடியேகாம உள்ளடக்கத்தைப் பார்க்கும்சாத்தியங்கள் உருவாயின. இறக்குமதி செய்யப்பட்டநீலப் படங்களின் சில பகுதிகள்வெட்டி எடுக்கப்பட்டு, திரையரங்குகளில் மிதமான ஆபாசப் படங்களுக்குள்இணைக்கப்பட்டன.
1990களில்இந்தியாவில் வீடியோ பரவலும் அதன்மிகப்பெரிய பெருக்கமும் கடத்தல், திருட்டுப் பதிப்புகள்ஆகியவற்றின் நிழல் பொருளாதாரம் குறித்தகவலைகளை உருவாக்கின. ஊடகங்களிலும் இவை குறித்த செய்திக்கட்டுரைகள் வெளியாயின. பம்பாயின் சாண்டாக்ரூஸ் எலக்ட்ரானிக்ஸ்ஏற்றுமதி செயலாக்க மண்டலத்திலிருந்து வீடியோடேப்கள் பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி 1991ஆம் ஆண்டு ‘தி டைம்ஸ்ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஆர். ஸ்ரீனிவாசன் எழுதினார். அவை ஹாங்காங் போன்றநாடுகளிலிருந்து வரும் தனிநபர்களைப் (கேரியர்கள்) பயன்படுத்திக் கடத்தப்பட்டன. எக்ஸ்ரே ஸ்கேன்களை ஏமாற்றகார்பனைஸ் செய்யப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்துதல், சுங்கப் பிரிவில் இருக்கும்தொடர்புகளைப் பயன்படுத்துதல் போன்ற வழக்கமான தந்திரங்களுடன், விசிஆர், ஸ்டீரியோ ஆகியவற்றுக்கு வரிசெலுத்துவதன் மூலம் கேரியர்கள் அதிகாரிகளைத்திசைதிருப்பினார்கள். கடத்தல் பொருட்களைத் தனிப்பையில் வைத்து எடுத்துவந்தார்கள். கணிசமானஅளவு வரி செலுத்திய ஒருவரைத்தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துவரக்கூடிய நபராகச்சந்தேகிக்க மாட்டார்கள் என்னும் சாத்தியக்கூறை நம்பிக்கடத்தல்காரர்கள் விசிஆர், ஸ்டீரியோவிற்கு வரிசெலுத்துவதன் மூலம் அதிகாரிகளைத் திசைதிருப்பியதாகஸ்ரீனிவாசன் எழுதினார்.
திரைப்படத்துறையைச் சேர்ந்த குழுக்கள், தாராளமயமாக்கலுக்குச்சில ஆண்டுகளுக்கு முன்பு, 1986ஆம் ஆண்டில், திரைப்படங்களின் எண்ணிக்கையில்ஏற்பட்ட சரிவுக்கு வீடியோ படையெடுப்பால்திரையரங்க வசூலில் ஏற்பட்ட சரிவைக்காரணமாகக் கூறின. இது சங்கிலித்தொடர் விளைவுக்கு வழிவகுத்தது. அதாவது சினிமா பார்வையாளர்கள்குறைந்ததற்கு ஏற்பத் திரைப்படத் தயாரிப்பில்செய்யும் முதலீட்டுக்கான லாபத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டது. திரைப்படங்களின்விநியோகத்தைப் பாதித்த சாபக்கேடாகத் திருட்டுவீடியோ குறித்த பதற்றம் தொடர்ந்துநிலவியது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விசிஆர்களின்எண்ணிக்கையின் விளைவாக, அரசாங்கத்திற்கு வரவேண்டிய பொழுதுபோக்கு வரியும் குறைந்தது. இந்தியத்திரைப்படக் கூட்டமிப்பு 1986ஆம் ஆண்டு வெளியிட்டஒரு அறிக்கையில், திருட்டுவீடியோ, இந்தியத் திரைப்படங்களையும் வளைகுடாநாடுகளுக்கான அதிகாரப்பூர்வ விசிஆர் பிரிண்ட்களின் ஏற்றுமதியையும்எவ்வாறு பாதித்தது என்பதைக் குறிப்பிட்டது.
இதற்கிடையில், வீடியோக்களை வாடகைக்கு விடும் பார்லர்கள்கட்டுப்பாடின்றிக் காளான்களாக வளர்ந்துவருவதைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஒழுங்குமுறைகளைக்கொண்டுவந்தன. வீடியோ நூலகங்களை உரிமம்பெறாமல் நடத்துவது, பாலியல் உள்ளடக்கம் கொண்டவீடியோக்களை வாடகைக்கு எடுப்பது, புதிதாகவெளியிடப்பட்ட படங்களின் திருட்டுப் பிரதிகள், 35 மிமீ படங்களின் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டபிரதிகள் போன்ற முறைகேடான வர்த்தகநடவடிக்கைகள் அனைத்தும் கவலைக்கான உடனடிக்காரணமாகக் கணிக்கப்பட்டன. 1952ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராஃப்சட்டம் 1984, மார்ச்சில் திருத்தப்பட்டு, அனைத்து வீடியோ கேசட்டுகளும்புதிய தணிக்கைச் சான்றிதழைக் கொண்டிருக்கவேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டது. மாநில அரசுகள் பொழுதுபோக்கு வரியைவசூலித்ததால், திருட்டு வீடியோவைக் கட்டுப்படுத்துவதற்கானஒழுங்குமுறை வழிமுறைகளை வகுப்பது அவர்களின் பொறுப்பாகக்கருதப்பட்டது.
என்ஆர்ஐ திட்டம்
இந்தியாவின்ஊடகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களுடன், பரந்த சமூக-பொருளாதார முன்னேற்றங்களும்இதில் பங்கு வகித்தன. வெளிநாடுவாழ்இந்தியர்கள் இதில் முக்கியப் பங்குவகித்தார்கள். 1990களில் இந்தியா அந்நியச்செலாவணிப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது பொருளாதாரத்தை நிலைப்படுத்தக்கூடிய பயன்படுத்தப்படாத வள ஆதாரமாகப்புலம்பெயர்ந்த இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டனர். 1991இல்இந்திய ரூபாயின் மதிப்புக் குறைப்புதிரைப்படத் துறையில் எதிர்பாராத தாக்கங்களைஏற்படுத்தியது. 35 மிமீ கச்சா பிலிம்ரோல்களின் இறக்குமதி சரிந்தது. திரைப்படஉருவாக்கத்திற்கான பொருட்களை வாங்குவதற்கான செலவுகள்அதிகரித்தன. தேசியத் திரைப்பட மேம்பாட்டுக்கழகத்தின் நிதியுதவி பெற்ற திரைப்படத்தயாரிப்பாளர்கள் 35 மிமீக்குப் பதிலாக மலிவான 16 மிமீபிலிம்களில் படமாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். 1970களின் பிற்பகுதியில் ஏற்கெனவேசட்டவிரோத நிதி, பதுக்கல், ஊகவணிகம் ஆகியவை முக்கியக் கவலைகளாகஇருந்தன. பதுக்கல்காரர்களை அடையாளம் காண்பதற்கான கோரிக்கைகளுக்குமத்தியில், நட்சத்திரங்களுக்கான ஊதியம் முதல் திரையரங்கங்களுக்கானமுன்பணம் வரையிலான பணப் பரிமாற்றங்களுக்குக் "கறுப்புப் பண”த்தைப்பயன்படுத்துவதன் மூலம் விதிமுறைகளை மீறும்முக்கியமான துறைகளில் ஒன்றாக இந்தியசினிமாத் துறையைச் சித்தரிக்கும் செய்திக்கட்டுரைகள் வந்தன. 1980களில் ஏற்றுமதி அதிகரித்தபோதிலும், கடனுக்குச் செலுத்தும் வட்டியும்இறக்குமதிகளும் வேகமாக உயர்ந்தன. இதுவெளிநாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டியதொகைகளுக்கான நெருக்கடியும் அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையும்ஏற்பட வழிவகுத்தது. அந்நியச் செலாவணி இருப்பைமீண்டும் வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும் கட்டாயம்அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அரசு வெளிநாடுவாழ் இந்தியர்கள்பக்கம் திரும்பியது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான என்ஆர்ஐ பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. என்ஆர்ஐகளிடமிருந்து அந்நியச் செலாவணி வைப்புத்தொகை திரட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்குத் திரும்பப்பெற இயலாத வகையிலும், மறைமுகமான ரிசர்வ் வங்கி உத்தரவாதத்துடனும்மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்வரையிலுமான காலகட்டத்திற்குக் கவர்ச்சிகரமான விகிதங்களில் இந்த வைப்புத் தொகைதிரட்டப்பட்டது. இது என்ஆர்ஐகளை இந்தியநிதி அமைப்பின் உறுதியான தளமாகமாற்றியது. பெரிய பொருளாதார சக்திகள், திரைப்பட நிறுவனங்களின் வரலாறுகளின் பின்னணியில், "என்ஆர்ஐ திட்ட”த்தின் உருவாக்கத்தைக்காணலாம்.
1984ஆம் ஆண்டில், என்ஆர்ஐகள் பணம்அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளால் தூண்டப்பட்டு இந்திய அரசாங்கம் "என்ஆர்ஐதிட்டம்" என்ற திரைப்பட இறக்குமதித்திட்டத்தைக் கொண்டுவந்தது. இது புலம்பெயர்ந்த இந்தியர்கள்இந்திய அரசு நியமிக்கும் முகமையின்மூலமாகக் கட்டணம் செலுத்தி இந்தியாவிற்குள்வெளிநாட்டுத் திரைப்படங்களை இறக்குமதிசெய்ய அனுமதித்தது. இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும்அதிகாரம் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக்கழகத்திற்கு (NFDC) வழங்கப்பட்டது. மத்தியத் திரைப்படச் சான்றிதழ்வாரியத்தின் (CBFC) நிர்வாக அதிகாரி இத்தகையஇறக்குமதிக்கான முகவராக நியமிக்கப்பட்டார். இந்தத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தைஇந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
எனினும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் படங்களை இறக்குமதி செய்வதுதவறான காரணங்களுக்காக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. வெளிநாடுவாழ்இந்தியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட படங்கள்சந்தையை ஆக்கிரமித்துக்கொள்வதால் இந்தியத் திரைப்படங்களுக்குத் திரையரங்குகளில்நியாயமான பங்கு கிடைக்கவில்லை எனக்கருதப்பட்டது. திரைப்பட இறக்குமதித் திட்டத்தின்படி, அந்நியச் செலாவணியை இந்தியாவிற்குள் கொண்டுவருவதன்மூலம் நாட்டின் வளர்ச்சியை ஆதரிக்கவிரும்பும் நபராக வெளிநாடுவாழ் இந்தியர்கருதப்பட்டார். ஆனால் நடைமுறையில் இந்தத்திட்டத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மட்டும் செயல்படவில்லை. இந்தியாவிலுள்ளசிலர் தங்களது வெளிநாட்டுத் தொடர்புகளைப்பயன்படுத்தி, திரைப்படத்தின் அழகியல், தரம், முறைமைகள்ஆகியவை பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படாமல் வெளிநாட்டுப்படங்களை இறக்குமதி செய்தனர்.
சில சமயங்களில், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தமுகவர்கள் வெளிநாடுவாழ் இந்தியரை, இந்தியாவைத் தளமாகக்கொண்ட கொள்முதல் செய்பவருடன் திரைப்படங்களைஇறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இணைப்பார்கள். பின்னர் அவர்கள் அந்தப்படங்களுக்கான விநியோகஸ்தரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்வார்கள். என்ஆர்ஐகளுக்கு அனுமதி வழங்கக்கூடிய முகமைகளில்ஒன்றான பம்பாயைச் சேர்ந்த தாராசிங் அண்ட் சன்ஸ், திரைப்படங்கள்இந்திய விமான நிலையத்தை அடைந்தவுடன்ஆவண ரீதியான சம்பிரதாயங்களைப்பூர்த்திசெய்ய உதவியது. வெளிநாட்டுத் திரைப்படங்கள்இறக்குமதி செய்யப்படும் நாட்டை அடிப்படையாகக் கொண்டுவரையறுக்கப்படுவதற்குப் பதிலாக, இறக்குமதி செய்யப்பட்டபடங்கள் ஸ்வீடன், டச்சு, ஆங்கிலத்திரைப்படங்களின் கலவையைக் கொண்ட கலப்பினத்தொகுப்புகளாக விளம்பரப்படுத்தப்பட்டன.
இந்த இறக்குமதித் திட்டத்தின் எதிர்பாராத பக்க விளைவு என்னவென்றால், இது வெளிநாட்டுப் பாலியல்படங்களும் உணர்ச்சிகளைச் சுரண்டும் மலினமான படங்களும்வருவதற்கு வழிவகுத்தது. விஹெச்எஸ் வழியாக நீலப்படங்கள் ஏற்கெனவே பரவலாக வந்துகொண்டிருந்தபோதிலும், அரசாங்கம் தொடங்கிய திட்டத்தையே பயன்படுத்திஇத்தகைய படங்கள் இறக்குமதி செய்யப்பட்டதுபலரையும் அதிருப்திக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியது. இறக்குமதிப் படங்களின் தரம் குறித்துப்புகார்கள் வரத் தொடங்கியதால் இந்தியஅரசாங்கம் திரைப்படங்களைச் சான்றிதழ் பெற மத்தியத்திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு முன்புஅவற்றுக்கு அனுமதி அளிக்கத் திரைப்படஇறக்குமதிக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் கட்டத்தில்தான் எழுதப்பட்ட திரைக்கதைகளுக்கும் அவற்றைத் திரைப்படமாக்கிய விதத்திற்கும்இடையிலான முரண்பாட்டை மத்தியத் திரைப்படச் சான்றிதழ்வாரியத்தின் அதிகாரிகள்உணர்ந்தனர். திரைப்பட இறக்குமதிக் குழுவால்தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்களுக்கான சான்றிதழ்களைவாரியம் மறுத்தது. இதன் மூலம், அவைஎதனை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டன எனஅது கேள்வி எழுப்பியது.
மித-ஆபாசப் படங்களும் பாலியல் கல்வியும்
1985-87 வரை, 558 படங்கள் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 296 படங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் இறக்குமதி செய்யப்பட்டவை. நிராகரிக்கப்பட்டுஅரசாங்கத்தின் கிடங்கிலேயே கிடந்த பல படங்களின்பிலிம் ரோல்கள் பின்னர் பழையபொருட்களை வாங்கும் வியாபாரிகளுக்கு விற்கப்பட்டன. 1990களின் முற்பகுதியில் திரையரங்குகளிலும் இதர இடங்களிலும் திரையிடப்பட்டவெளிநாட்டுத் தொகுப்புப் படங்களில் இவையும் இடம்பெற்றன. அவை திரைப்படப் பிரதிகளாகப்புழக்கத்தில் விடப்பட்டது மட்டுமல்லாமல், விஹெச்எஸ் டேப்களாகவும் மாற்றப்பட்டன. வீடியோக்களை வாடகைக்கு விடும் வீடியோபார்லர்களிலும், சிறிய அளவிலான பார்வையாளர்களுக்காகஆபாசப் படங்களைத் திரையிடும் விஹெச்எஸ்பார்லர்களிலும் இவை இடம்பெற்றன. ஆக, என்ஆர்ஐ திரைப்படத் திட்டம் பொருளாதாரத்தை உயர்த்துவதைநோக்கமாகக் கொண்டிருந்தாலும், திருட்டுப் பதிப்புகள், ஆபாசப் படங்கள் பற்றியகவலைகள் நிறைந்த திரைப்பட ஊடகவட்டாரத்தின் கவலைகளை அதிகரிக்கச்செய்வதிலும் அது பங்குவகித்தது.
ஆனால் இது எதிர்பாராத சாதகமானவிளைவுகளையும் கொண்டிருந்தது. நான் எழுதிய Rated A: Soft-Porn Cinema and Mediations of Desire in India (University of California Press, Zubaan Books, 2024) என்னும் புத்தகம் இந்தவகையான சினிமாவையும் அதன் வரலாறையும் அடிப்படையாகக்கொண்டது. இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்பாலியல் கல்வியை முன்னிருத்தி, தணிக்கையாளரின்கண்காணிப்பைத் தாண்டிச் செல்லச் சிறப்புப்பார்வையாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் "S" சான்றிதழை வெற்றிகரமாகப் பயன்படுத்த, என்ஆர்ஐ திட்டமும் பழைய பொருட்களைவிற்பவர்கள் மூலம் திரைக்கு வந்தபாலியல் படங்களும் முன்னோடியாக இருந்தன. என்ஆர்ஐ திட்டம் செயல்பட்ட காலகட்டத்தில்அறிமுகமான அழகியல் அம்சங்கள், கதைக்கானகருப்பொருள்கள், தொழில்துறை மாதிரிகள் ஆகியவற்றிலிருந்து பலவிஷயங்களை எடுத்துக்கொண்ட மலையாள மித-ஆபாசப்படங்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர் திரைப்படத் தொகுப்புகள்முன்னோடியாக இருந்தன. குறைந்த முதலீட்டுப்படங்களின் பலவீனமான பொருளாதாரம் என்ஆர்ஐபடங்களால் நாட்டு எல்லைகளைக் கடந்ததாகமாறியது. தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த, பார்வையாளர்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானபரபரப்பான புனைகதைகள், காமம் சார்ந்த உள்ளடக்கங்கள்ஆகியவற்றின் உள்ளூர்ப் பதிப்புகளை உள்ளடக்கியஅதே வேளையில், என்ஆர்ஐபடங்களின் பாலியல் சுரண்டல் கதைகளிலிருந்துதங்களுக்கான முன்மதிரிகளை எடுத்துக்கொண்டார்கள். என்ஆர்ஐ திட்டம் இல்லாமல்மலையாள மித-ஆபாசப் படங்கள்வந்திருக்காது என்று சொல்லலாம்.